பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தின் பொருளாதார ஆய்வறிக்கையினை இன்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் படி, 2022 - 23ல் தனி நபர் ஆண்டு வருமானம் என்பது 15.62 சதவீதம் எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.43 சதவீதம் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள இந்த கணக்கெடுப்பின் படி, இம்மாநிலத்தின் 2021 - 22ம் நிதியாண்டில் ஜிஎஸ்டிபி விகிதமானது 11.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 13.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தனி நபர் வருமானம்
இதே தனி நபர் வருமானம் என்பது 2022 - 23ம் நிதியாண்டில் 1.40 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2021 - 22ம் ஆண்டிற்கான வருமானம் 1.21 லட்சமாக இருந்தது.
மாநில அரசின் தொடர்ந்து வளர்ச்சி விகிதமானது 26.43% ஆக உள்ளது.
வளர்ச்சி பாதையில் வருமானம்
இந்த ஆய்வறிக்கை குறித்து MP முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் வேகமாக வருவதை இதன் மூலம் அறிய முடிகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நிதியமைச்சர் ஜெகதீஷ் தேவ்ரா மாநிலத்தின் முதல் காகிதம் இல்லாத பட்ஜெட்டை மார்ச் 1ம் தேதி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழகத்தின் நிலை?
சமீபத்தில் இந்திய அளவில் தனிநபர் ஆண்டு வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியானது. உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாடு தனிநபர் வருமானம் சுமார் 4 மடங்கு அதிகமாகவும் இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானத்தை விட தமிழ்நாட்டின் சராசரி வருமானம் சுமார் 2 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிநபர் ஆண்டு வருமானம்
தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.4 லட்சம் ரூபாய் என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 1.35 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனி நபர் வருமானம் வெறும் 65,704 என்று கணக்கிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications