ஆக்ஸிஸ் வங்கி நீண்டகால நோக்கில் 30% லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் அட்டகாசமான கணிப்பு!

இந்திய பங்கு சந்தையினை பொறுத்தவரையில் சமீபத்திய காலமாகவே வங்கி பங்குகள் என்பது சிறந்த பெர்பார்மன்ஸை கொடுத்து வருகின்றன. இனியும் வரவிருக்கும் காலாண்டுகளிலும் இந்த போக்கு என்பது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

குறிப்பாக வங்கிகளின் கடன் வளர்ச்சி, வங்கிகளின் வாரக்கடன் சரிவு, சொத்தின் தரம் மேம்பாடு என பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில், அவற்றின் மார்ஜின் விகிதம் என்பது மேம்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வங்கி பங்குகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இனியும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

10% சரிவு

10% சரிவு

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி. இப்பங்கு நடப்பு ஆண்டில் இதுவரையில் 942 ரூபாயில் இருந்து, 845 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டுள்ளது. 2023ம் ஆண்டில் 10% சரிவினைக் கண்டுள்ளது.

எனினும் இந்த காலகட்டத்திலும் கூட தரகு நிறுவனங்கள் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

தரகு நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி பங்கினை 1100 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 30% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒன்றாகவும் மாறலாம். Prabhudas Lilladher research ஆய்வறிக்கையானது, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இணைப்பானது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

இந்த இணைப்பு நடவடிக்கையால் ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாடு என்பது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு CAGR விகிதம் 205 வரையில் ஏற்றம் காண வழிவகுக்கலாம். இதற்கிடையில் இவ்வங்கியில் காசா வீதமும் அதிகரிக்கலாம்.

மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு

மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு

ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கியின் இணைப்பும் வங்கி வணிகம் மேம்படலாம். இதன் காரணமாக ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகம், சொத்து மதிப்பு, சில்லறை வணிகம், வங்கி செயல்பாடு என பலவும் விரிவடையலாம். இதன் இலக்கு விலையை 1130 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

கடந்த மார்ச் 2022ல் அறிவிக்கப்பட்ட இந்த கையகப்படுத்தல் குறித்த அறிவிப்புக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு வந்தது. நிதி சேவை குறித்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 1.41 பில்லியன் டாலராகும். (இதன் இந்திய மதிப்பு 11,630 கோடி ரூபாயாக உள்ளது. ஆக இதுவும் ஆக்ஸிஸ் வங்கியின் வளர்ச்சிக்கு நீண்டகால நோக்கில் துணை புரியலாம். இது இப்பங்கின் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.

போட்டியை எதிர்கொள்ள உதவும்

போட்டியை எதிர்கொள்ள உதவும்

இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவானதாக உள்ள நிலையில், அந்த இடைவெளியினை இந்த கையகப்படுத்தல் நிரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+