இந்திய பங்கு சந்தையினை பொறுத்தவரையில் சமீபத்திய காலமாகவே வங்கி பங்குகள் என்பது சிறந்த பெர்பார்மன்ஸை கொடுத்து வருகின்றன. இனியும் வரவிருக்கும் காலாண்டுகளிலும் இந்த போக்கு என்பது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
குறிப்பாக வங்கிகளின் கடன் வளர்ச்சி, வங்கிகளின் வாரக்கடன் சரிவு, சொத்தின் தரம் மேம்பாடு என பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில், அவற்றின் மார்ஜின் விகிதம் என்பது மேம்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வங்கி பங்குகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இனியும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
10% சரிவு
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி. இப்பங்கு நடப்பு ஆண்டில் இதுவரையில் 942 ரூபாயில் இருந்து, 845 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டுள்ளது. 2023ம் ஆண்டில் 10% சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் இந்த காலகட்டத்திலும் கூட தரகு நிறுவனங்கள் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
விலை அதிகரிக்கலாம்
தரகு நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி பங்கினை 1100 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 30% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒன்றாகவும் மாறலாம். Prabhudas Lilladher research ஆய்வறிக்கையானது, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இணைப்பானது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
இந்த இணைப்பு நடவடிக்கையால் ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாடு என்பது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு CAGR விகிதம் 205 வரையில் ஏற்றம் காண வழிவகுக்கலாம். இதற்கிடையில் இவ்வங்கியில் காசா வீதமும் அதிகரிக்கலாம்.
மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு
ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கியின் இணைப்பும் வங்கி வணிகம் மேம்படலாம். இதன் காரணமாக ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகம், சொத்து மதிப்பு, சில்லறை வணிகம், வங்கி செயல்பாடு என பலவும் விரிவடையலாம். இதன் இலக்கு விலையை 1130 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
கடந்த மார்ச் 2022ல் அறிவிக்கப்பட்ட இந்த கையகப்படுத்தல் குறித்த அறிவிப்புக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு வந்தது. நிதி சேவை குறித்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 1.41 பில்லியன் டாலராகும். (இதன் இந்திய மதிப்பு 11,630 கோடி ரூபாயாக உள்ளது. ஆக இதுவும் ஆக்ஸிஸ் வங்கியின் வளர்ச்சிக்கு நீண்டகால நோக்கில் துணை புரியலாம். இது இப்பங்கின் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.
போட்டியை எதிர்கொள்ள உதவும்
இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவானதாக உள்ள நிலையில், அந்த இடைவெளியினை இந்த கையகப்படுத்தல் நிரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications