இந்திய பங்கு சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் என்பது நிலவி வரும் நிலையில், நல்ல செயல்திறனை கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் டாடா குழுமத்தின் இரு பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
டிசிஎஸ்
மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனம், டாடா குழுமத்தினை சேர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 3810 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 30% ஏற்றத்தினை காணலாம் என கணித்துள்ளது.
நல்ல வளர்ச்சி
டிசிஎஸ் நிறுவனத்தினை விட்டு வெளியேறியுள்ள ராஜேஷ் கோபிநாதன் ஆறு ஆண்டுகள் மட்டுமே நிறுவனத்தினை வழி நடத்தினார். எனினும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். சமீபத்திய காலமாக தனது போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி நல்ல வளர்ச்சியினையும் கண்டார். இது சில சவால்களை கண்டிருந்தாலும் வளர்ச்சி என்பது மற்ற நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாகவே இருந்தது.
இலக்கு விலை
இதற்கிடையில் FY23 - 25ம் ஆண்டு 16 சதவீதம் வளர்ச்சியினை காணலாம் என கணித்துள்ளது. இதற்கிடையில் தான் இலக்கு விலையை 3810 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது இன்னும் 20% ஏற்றம் காண வாய்ப்புள்ளதாகவும், இதற்கிடையில் தான் இந்த நிறுவன பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது தரகு நிறுவனம்.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறித்து பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இதனையும் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் லாபமும் தொடர்ந்து நிலையாக இருந்து வரும் நிலையில், இதன் நிதி நிலை அறிக்கையும் வலுவாக காணப்படுகின்றது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் பங்கு விலை அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
டாடா மோட்டார்ஸ் இலக்கு விலை
இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ள மோதிலால் ஆஸ்வால் நிறுவனம், இப்பங்கின் விலையானது படிப்படியாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இதன் இலக்கு விலையை 540 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் எபிட்டா விகிதமும் நல்ல வளர்ச்சியினை காணலாம் என கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications