கருப்பு திங்கட்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச வர்த்தக பாதிப்புகள் மத்தியில் இந்திய பங்குச்சந்தையும் மோசமான சரிவை பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பில் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
இன்றைய வரத்தகத்தில் ரிலையன்ஸ் பங்கின் விலை 7.4% வரை குறைந்து, கடந்த 52 வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.1,115.55 ஐ எட்டி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இன்றைய வர்த்தக சரிவுக்கு முழுக்க முழுக்க அமெரிக்க வரி விதிப்பும் அதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பாதிப்பும் தான் முக்கியமான காரணமாக உள்ளது.

இதேவேளையில் அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகளும் வரிகளை விதிக்க துவங்கியிருப்பது அமெரிக்க பொருளாதாரத்தை ரெசிஷனுக்கு தள்ளிவிடும் என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் முதலீட்டு சந்தை தலைகீழாக புரட்டிப்போடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த ஆறு வர்த்தக நாட்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்ததால், மொத்தமாக 12.7% இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் ரூ.2.26 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது. தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 15.49 லட்சம் கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டில் 21.6% சரிவும், கடந்த ஆறு மாதங்களில் 17.4% சரிவும், கடந்த மாதத்தில் 5.3% சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வாரத்தில் மட்டும் பங்கு 10% சரிவை சந்தித்துள்ளது, இதன் ரிலையன்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் பாதிப்பை அளித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சந்தை தொடங்கியதும் கிட்டத்தட்ட 5% வரை சரிந்தன. இது 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான ஒரே நாள் சதவீத சரிவாகும். 12 மணியளவில் சென்செக்ஸ் 2822.80 புள்ளிகள் சரிந்து 72,535 புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது, இதேபோல் நிஃப்டி 904.70 புள்ளிகள் சரிந்து 21,999.75 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த சந்தை சரிவுடன் ஒப்பிடும்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒப்பீட்டளவில் குறைந்த வீழ்ச்சியை சந்தித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போது அதன் 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் சராசரிகளுக்குக் கீழே வர்த்தகம் செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்த வரிக் கொள்கை வெளியிட்டதை தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தையில் விற்பனையை தூண்டியுள்ளது. இது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்து, பரந்த பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications