பங்குச் சந்தையில் எண்ணற்ற பங்குகள் நல்ல லாபம் கொடுக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில பங்குகள் மல்டிபேக்கர் வருவாயையும் வழங்குகின்றன. அந்த வகையி, ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கும் ஸ்மால்கேப் நிறுவனம் ஆகும். அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1503.73% அபரிமிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இப்போது இந்த நிறுவனம் முதல் முறையாக போனஸ் பங்குகளை வெளியிடப் போகிறது.
மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கும் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு தற்போது ரூ.1000க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் 5879.47% அபாரமான வருமானத்தை அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ்184.08% வருமானத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.

BSE தரவுகளின்படி, தற்போது ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.16,473.44 கோடியாக உள்ளது. இது அதன் வலுவான செயல்திறனைக் காட்டுகிறது. நிறுவனத்தின் ஒரு பங்கை 5 பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்ட அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட 5 பங்குகளாகப் பிரிக்கப்படும். இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கலாம். இதனால் இந்த பங்குகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
ஜனவரி 3, 2025 அன்று இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ. 902.90 இல் நிறைவடைந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் 17.97% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 4.98% குறைந்துள்ளது. இருப்பினும், பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 1422.60% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3300.75% அதிகரித்துள்ளது.
ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸின் பங்குப் பிரிப்புக்கான பதிவு தேதி 17 ஜனவரி 2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 17 அல்லது அதற்கு முன் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் பங்கு பிரிவின் பயனாளிகளாக இருப்பதோடு கூடுதல் பங்குகளும் கிடைக்கும்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications