பங்குச் சந்தையில் எண்ணற்ற பங்குகள் நல்ல லாபம் கொடுக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில பங்குகள் மல்டிபேக்கர் வருவாயையும் வழங்குகின்றன. அந்த வகையி, ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கும் ஸ்மால்கேப் நிறுவனம் ஆகும். அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1503.73% அபரிமிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இப்போது இந்த நிறுவனம் முதல் முறையாக போனஸ் பங்குகளை வெளியிடப் போகிறது.
மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கும் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு தற்போது ரூ.1000க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் 5879.47% அபாரமான வருமானத்தை அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ்184.08% வருமானத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.

BSE தரவுகளின்படி, தற்போது ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.16,473.44 கோடியாக உள்ளது. இது அதன் வலுவான செயல்திறனைக் காட்டுகிறது. நிறுவனத்தின் ஒரு பங்கை 5 பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்ட அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட 5 பங்குகளாகப் பிரிக்கப்படும். இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கலாம். இதனால் இந்த பங்குகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
ஜனவரி 3, 2025 அன்று இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ. 902.90 இல் நிறைவடைந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் 17.97% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 4.98% குறைந்துள்ளது. இருப்பினும், பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 1422.60% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3300.75% அதிகரித்துள்ளது.
ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸின் பங்குப் பிரிப்புக்கான பதிவு தேதி 17 ஜனவரி 2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 17 அல்லது அதற்கு முன் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் பங்கு பிரிவின் பயனாளிகளாக இருப்பதோடு கூடுதல் பங்குகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications