இந்திய பங்கு சந்தைகளில் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே ஏற்ற இறக்கம் அதிகம் எனலாம். குறிப்பாக கடந்த சில அமர்வுகளாக மிக அதிகம். ஆனால் இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியிலும் கடந்த 5 வர்த்தக அமர்வுகளில் மட்டும், ஒரு பங்கின் விலையானது 20% அதிகரித்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 0.2 சதவீதம் சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன பங்கு அது? இது குறித்து நிபுணர்களின் பரிந்துரை என்ன? இனியும் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.
பங்கு பரிந்துரை
இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் மிண்டா கார்ப்பரேஷன். இப்பங்கு குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது? வாருங்கள் பார்க்கலாம்.
இந்த நிறுவனத்திற்கு ஆரோக்கியமான எதிர்காலம் உள்ள நிலையில், இப்பங்கினை வங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இப்பங்கானது மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு இலக்கு
கடந்த ஒரு வருட காலகட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 181% அதிகமாக லாபம் கொடுத்துள்ளது. இதற்கிடையில் இதன் 12 மாத இலக்கு விலையாக 315 ரூபாயினையும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் தற்போதைய நிலவரம் 271.20 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 287 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 93.80 ரூபாயாகும்.
வலுவான ஆர்டர்கள் வரவு
2022ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வலுவான ஆர்டர்கள், இதன் மதிப்பு சுமார் 4,232 கோடி ரூபாய் ஆகும். இதில் குறிப்பாக மின்சார வாகனங்களுக்காக 843 கோடி ரூபாய் ஆர்டரும் கிடைத்துள்ளது. மொத்தத்தில் ஆரோக்கியமான வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
வளர்ச்சி எதிர்பார்ப்பு
குறிப்பாக மின்சார வாகன நிறுவனங்கள் உள்பட (ஹீரோ எல்க்ட்ரிக் & பிஎம்டபள்யூ) வலுவான வாகனங்காளுக்கான வலுவான ஆர்டர் புத்தக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது மார்ஜின் விகிதங்களை சேர்க்க உதவும். இது நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

கழுதை மேச்சா செம வருமானம்!! அரசாங்கமே ரூ.50 லட்சம் தருது!! வேற என்ன வேணும்?

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications