அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த 4 மாதங்களாகப் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம், வட்டி விகிதம் உயர்வு ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான சரிவையும் தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவின் மூலம் ஏப்ரல் 2020க்கு பின்பு நாஸ்டாக் காம்போசிட் குறியீடு மீண்டும் டெத் கிராஸ் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாஸ்டாக் காம்போசிட்
நாஸ்டாக் காம்போசிட் குறியீடு நவம்பர் 19ஆம் தேதி உச்சத்திற்குப் பின்பு வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட 1.2 சதவீதம் வரையிலான சரிவின் மூலம் மொத்தமாக 16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
டெத் கிராஸ்
டெத் கிராஸ் என்பது சில முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டு சந்தை போக்கை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முறை, தற்போது நாஸ்டாக் காம்போசிட் குறியீடு வெள்ளிக்கிழமை சரிவுடன் மீண்டும் மோசமான டெத் கிராஸ் நிலையை அடைந்துள்ளது எனப் பொருளாதார வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.
2000, 2008, 2020
இந்த டெத் கிராஸ் நிலை கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலமான 2020 ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது, இதற்கு முன் ஐடி மற்றும் டெக் துறையில் உருவான டாட் காம் பபுள் வெடித்த ஜூன் 2000லும், லெமேன் பிரதர்ஸ் திவாலான போது சர்வதேச சந்தையில் உருவான கடுமையான நிதி நெருக்கடிக் காலமான ஜனவரி 2008ல் உருவானது, தற்போது மீண்டும் உருவாகியுள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள்
இந்த டெத் கிராஸ் மூலம் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் கட்டாயம் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்பது இல்லை, ஆனால் கட்டாயம் சரிவு பாதை தொடரும் என்பது உறுதி. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications