சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) என்பது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் பண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி ஆகும். இந்தியாவில் எஸ்பிஐ போன்ற நீண்ட கால முதலீடுகள் குறித்து முதலீட்டாளா்கள் நிச்சயமற்று உள்ளனர்.
எஸ்பிஐ போன்ற நீண்ட கால முதலீடுகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், 20 ஆண்டுகள் சந்தையில் முதலீடு செய்தாலும் நீங்கள் ஆதாயம் அடைவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று அன்சிட் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அனுராக் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பங்குச் சந்தையில் 20 வருடங்கள் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் என்று கூறும் நிபுணர்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. கடந்த கால செயல்திறன் எதிர்காலத்துக்கான உத்தரவாதம் அல்ல என்று மக்கள் கூறுகிறார்கள். பங்குச் சந்தையை பொறுத்தவரை யாரும் எதற்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.
எஸ்ஐபி பகுப்பாய்வு என்பது ஒரு பின்னோக்கிய நிகழ்வு. பங்குச் சந்தையில் 7,8,10 ஆண்டுகள் கரடியின் ஆட்டம் (வீழ்ச்சி) இருந்துள்ளது. அப்போது பங்குகள் மிகவும் மலிவாக இருந்தன. அந்த நேரத்தில் நீங்கள் பங்குகளில் முதலீடு செய்திருந்தால். இன்று நீங்கள் மிகவும் பணக்காரர்களாக வெளியே வருவீர்கள் என்பது தெளிவாகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவை தவிர்த்து உலகில் எந்த நாடுகளிலும் சந்தைகள் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டது இல்லை. கடந்த டிசம்பர் வரை 54 லட்சம் புதிய எஸ்ஐபி கணக்குகள் தொடங்கப்பட்டன, அதேசமயம் 44 லட்சம் எஸ்ஐபி கணக்குகள் மூடப்பட்டன.
கடந்த 2,3 ஆண்டுகள் ஏன் கடந்த ஒரு வருடத்தில் கூட முதலீட்டாளர்கள் இந்த நிதியிலிருந்து அந்த நிதிக்கு என பணத்தை மாற்றியுள்ளார்கள். இது முதலீட்டாளர்களுக்கு கூட நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.
முதலீட்டாளர்கள் கடந்த கால வருமானத்தை துரத்துகிறார்கள். அது எவ்வளவு வேகமாக ஏறியதோ அவ்வளவு விரைவாக குறைந்து விடும். இதை சொல்வதில் எனக்கு சந்தேகமும் இல்லை. எது நல்லது எது கெட்டது என்று எனக்கு தெரியாது. மதிப்புமிக்க முடிவு இல்லை. ஆனால் இவை சந்தைகள். எனவே தயவு செய்து நீங்கள் சொந்தமாக முடிவு எடுங்கள்.
செபியின் உத்தரவுப்படி, மியூச்சுவல் பண்டுகள் பணம் வந்தால் அதை உடனடியாக முதலீடு செய்ய வேண்டும். பணத்தை கையில் வைத்திருந்து சந்தை சரிவின்போது முதலீடு செய்ய முடியாது. அது ஒரு சிறிய பிரச்சினை. அதிக மதிப்பீடுகளில் திட்டங்களை தொடங்குவதால் நீண்ட கால வருமானம் மோசமாகி வருவதால் மியூச்சுவல் பண்ட் துறை ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications