துபாயை சேர்ந்த என்ஆர்ஐ முதலீட்டாளர் ஜஹாங்கீர் பனிக்கவீட்டில் பெரும்பரம்பத்து (ஜேபிபி). இவர் அண்மையில் பங்குச் சந்தையில் தனது கைவசம் உள்ள எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ததன் வாயிலாக ரூ.1.14 கோடி எதிர்பாராத லாபம் ஈட்டினார்.
இது பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியது. அதில், எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்தபோதிலும், எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் முக்கிய கூட்டாளிகள் நிறுவனத்தின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதை செபி கண்டு பிடித்தது.

எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறுவன இயக்குனர் சூட் மெங் சாங் 12.12 சதவீத பங்குகளை அதாவது 10.28 கோடி பங்குகளை ஜேபிபிக்கு (என்ஆர்ஐ முதலீட்டாளர்) வெறும் 1 டாலருக்கு கைமாற்றியுள்ளார். ஜேபிபி கடந்த ஜூலை-செப்டம்பர் மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய 2 காலகட்டங்களில் கணிசமான பங்குகளை விற்பனை செய்தார்.
அவர் விற்பனை செய்த 2 கால கட்டத்திலும் இந்நிறுவன பங்கின் விலை உச்சத்தில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. 2024 செப்டம்பர் 27ம் தேதியன்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 52 வார உச்சமான ரூ.267.50ஐ எட்டியது. இது ஜேபிபியின் பங்கு விற்பனை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியது.
நிறுவனத்தின் விலை உச்சத்தில் இருக்கும்போது கைவசம் உள்ள பங்குகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே விற்பனை செய்தபோதிலும், கணிசமான அளவு நிதியை துபாய்க்கு மாற்றியதில் ஜேபிபி குறிப்பிடத்தக்க லாபத்தை பெற்றதாக செபி தெரிவித்துள்ளது.
மேலும், எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் பூஜ்யமாக இருந்தபோதிலும், பிப்ரவரி 10ம் தேதி நிலவரப்படி, ஜேபிபி வசம் உள்ள மீதமுள்ள பங்குகளின் மதிப்பு ரூ.698 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் உச்ச விலை அடிப்படையில் ஜேபிபியின் முதலீட்டின் மதிப்பு 32.86 கோடி டாலராகும். இதனால் எஃப்இஎம்ஏ விதிமுறைகளை ஜேபிபி மீறியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது.
மோசடி நடவடிக்கைகள் மற்றும் பங்கு விலையில் சூழ்ச்சி போன்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் புரோமோட்டர் ப்ரோஃபவுண்ட் பைனான்ஸ் மற்றும் நான்கு பிற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய செபி தடைவிதித்தது.
செபி தற்போது எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் மீது மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தடை செய்தல் (பிஎஃப்யுடிபி) மற்றும் பட்டியல் கடமை மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள் (எல்ஓடிஆர்) விதிமுறைகளின் சாத்தியமான மீறல்கள் குறித்து இப்போது ஆழமான விசாரணையை நடத்தி வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை முந்தைய வர்ததக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் குறைந்து ரூ.64.56ஆக இருந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications