அமெரிக்கா ஈராக் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி மீண்டும் பொருளாதாரத் தடையினை விதிப்பதாக அறிவித்ததை அடுத்து எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்துள்ளன.
இதனால் ஈராக்கிற்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயரவு வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது HPCL, BPCL மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனக்களின் மார்ஜின் அடிப்படும்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடட்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடட் பங்குகள் 3.40 சதவீதம் என 10.25 புள்ளிகள் சர்ந்து 296.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடட்
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடட் நிறுவனப் பங்குகள் 13.15 புள்ளிகள் 3.35 சதவீதம் சரிந்து 379.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடட்
இந்திய ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனப் பங்குகள் 4.65 புள்ளிகள் என 2.79 சரிந்து 161.95 புள்ளிகளாக வர்த்ககம் செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடக தேர்தல்
கர்நாடக தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு சந்தை விலைக்கு ஏற்ற பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை ஏற்ற இறக்க அனுமதிக்காததால் ஒரு பக்கம் லாபத்தில் சரிவை சந்தித்து வருகின்றன. கர்நாடகாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருப்பதால் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பெரும் அளவில் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.
கலால் வரி
மத்திய அரசு இதனைத் தவிர்க கலால் வரியைக் குறைக்கலாம் என்றாலும் அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியால் இதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே இந்தத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மிகப் பெரிய மாற்றம் வந்து மக்களை அதிர்ச்சி அளிக்க இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
முதலீடுகள்
எனவே பங்கு சந்தை முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சந்தை சரிந்து மீண்டு உயரும் வாய்ப்பு இருக்கும் போது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் முதலீடு செய்யலாம்.