அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இது உலக நாடுகளை கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 15 நாட்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் 40%க்கும் மேல் உயர்ந்துள்ளன.
மோதல் தொடங்குவதற்கு முன்பு அதாவது பிப்ரவரி 27 அன்று சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் 73 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், இன்று அதன் விலை மளமளவென உயர்ந்து 103 டாலராக எட்டியுள்ளது. இது 30 டாலர் அளவிலான அதிகரிப்பாகும்; அண்மைக் காலத்தில் தோராயமாக 41.1% உயர்வை இது குறிக்கிறது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான இராணுவ மோதல் வெடித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானிய இராணுவத் தளங்கள் மற்றும் தலைமையை நேரடியாகத் தாக்கின. இத்தாக்குதல்களில், ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை அடுத்து போர் தீவிரமடைந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியது.
போர் தொடர்பான நிகழ்வுகள் வரும் நாட்களில் உலகச் சந்தைகளைத் தொடர்ந்து பாதிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொன்முடி , "மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக, வரவிருக்கும் வாரம் மிகவும் நிலையற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.
"சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பங்குதாரர்களின் அறிக்கைகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். இது மோதல் தீவிரமடைவதற்கான அல்லது இராஜதந்திர முறையில் நிலைமை தணியும் சாத்தியக்கூறுகளுக்கான சிக்னல்களை வழங்கும்" என்று பொன்முடி சுட்டிக்காட்டினார். இத்தகைய முன்னேற்றங்கள் கச்சா எண்ணெய் விலைப் போக்குகள், நாணயச் சந்தை ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மீது தனி கவனம் செலுத்தப்படும் என பொன்முடி தெரிவித்தார். இப்பாதையில் கப்பல் போக்குவரத்து நீண்டகாலம் தடைபட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாகும். இதனால் ஆசியாவின் பணவீக்க எதிர்பார்ப்புகள் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த சந்தைகளும் நிலையற்றதாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!



Click it and Unblock the Notifications