பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை காண முடிகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்களை காண முடிகிறது. நிஃப்டி காலை 24,448 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 24283 புள்ளிகள் வரை சரிவை கண்டது, ஒரு மணி நேரத்திலேயே மீண்டு வந்து நிஃப்டி 24,425 (11.35 மணி நிலவரம்) என வர்த்தகமானது . சென்செக்ஸும் 80,837 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 80,362 புள்ளிகள் வரை சரிந்தது, ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் உயர்ந்து 80,728 புள்ளிகள் (11.35 மணி நிலவரம்) என உயர்ந்தது. இந்த ஏற்ற இறக்கம் என்பது தற்காலிகமானது தான் என ஆதித்யா பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பாலசுப்ரமணியன் கூறியிருக்கிறார். மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் பாலசுப்பிரமணியன், சந்தை கண்ணோட்டத்தில் இதனை ஒரு எதிர்மறையான விஷயமாக பார்க்கக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.

என்ன நடந்தாலும் அதற்கு தயாரான நிலையில் தான் இந்திய பங்குச்சந்தைகள் இருந்தன என கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவை நம் பொருளாதாரத்திலோ அல்லது பங்குச் சந்தையிலோ பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது கிடையாது என தெரிவித்திருக்கிறார். வரலாற்று ரீதியாக பங்குச்சந்தை தரவுகளை நாம் பார்க்கும் போது இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை வேகமாக மீண்டு எழுந்து வந்திருக்கிறது என கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய விமான படையினர் பாலாகோட் பகுதியில் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்செக்ஸ் 239 புள்ளிகளும் நிஃப்டி 44 புள்ளிகளும் சரிவை கண்டன. ஆனால் அடுத்த நாளே சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து தான் வர்த்தகத்தை தொடங்கியது என கூறுகிறார். அதே போல 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை 0.2 சதவீதம் மட்டுமே சரிவை கண்டது என கூறுகிறார்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரை தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் 33 சதவீதம் உயர்வை கண்டன. போர் நடைபெற்ற அந்த மூன்று மாத காலமும் சென்செக்ஸ் 1115 புள்ளிகளும் நிஃப்டி 319 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. எனவே முதலீட்டாளர்கள் இந்த தாக்குதல் காரணமாக பங்குச்சந்தை இறங்குகிறது என்பதை கண்டு அச்சமடைய கூடாது என கூறுகிறார். இது நிரந்தரமானது கிடையாது இது மிக மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த தாக்கம் இருக்கும் இந்திய சந்தை உடனடியாக பல மடங்கு மீண்டு வரும் என்பதுதான் வரலாற்று ரீதியிலான தரவுகள் காட்டுகின்றன என குறிப்பிடுகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications