நாட்டின் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடான பேடிஎம்-மின் பங்கு வெளியீட்டு மதிப்பு 18,300 கோடி ரூபாயாகும். இப்படி மாபெரும் ஐபிஓ-வினை செய்த இந்த நிறுவனம், முதல் நாளே முதலீட்டாளர்களின் அதிருப்தியை கண்டுள்ளது.
பேடிஎம் பங்கு வெளியீட்டில் விலை நிர்ணயமானது, ஒரு பங்கிற்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்தில் பி.எஸ்.இ-ல் 1955 ரூபாயாக தொடங்கியது.
இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07% சரிவில் காணப்பட்டது.
பேசிஎம் மதிப்பு
அறிமுகத்தில் பேடிஎம் பங்குகள் சரிவினை கண்ட நிலையில், இந்த நிறுவனம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பினை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி? ஏன் இந்த பெரும் சரிவு? அதுவும் முதல் நாளே இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்? ஆய்வாளர்களின் கருத்து என்ன வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய காரணம்
இந்த நிறுவனம் இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. இன்னும் நஷ்டத்தில் தான் இருந்து வருகின்றது. மேலும் சந்தையில் அதிக விலை கொண்ட ஒரு பங்காக வெளியிடப்பட்டது. இதுவும் ஆரம்பத்திலேயே சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் எதிர்கால வருவாய் விகிதத்தினை கருத்தில் கொண்டு, இந்த பங்கு விலையானது நிர்ணயம் செய்யப்பட்டது.
பேடிஎம் திசை இல்லாதது?
பேடிஎம் பிசினஸ் மாடலானது கவனம் மற்றும் திசை இல்லாதது. இது லாபத்தினை அடைவது மிக கடினமான ஒரு விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் தான் பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவன, 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்தது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரப்பட்டது. மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்பட்டது.
பேடிஎம் நிறுவனரின் கருத்து?
பேடிஎம் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா, இந்த நாள் எங்களுக்கான நாள். இன்று பங்கு சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது என உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.
பேடிஎம் நிலவரம்?
இன்று காலையில் பட்டியலிடப்பட்ட நிலையில் சரிவில் தொடங்கிய நிலையில், முடிவில் என்.எஸ்.இ-யில் 27.40% சரிவினைக் கண்டு, 1560.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-ல் 27.25% சரிவினைக் கண்டு, 1564.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பிஎஸ்இ-ல் இன்றைய உச்சம் 1961.05 ரூபாயாகவும், இன்று குறைந்தபட்ச விலை 1564 ரூபாயாகும்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications