புத்தாண்டின் முதல் வாரத்தில் சென்செக்ஸ் 0.67 சதவீத உயர்வையும், நிஃப்டி 1.5 சதவீத உயர்வையும் பதிவு செய்துள்ளது. இந்த சீரான ஏற்றத்திலும் ஐந்து பென்னி பங்குகள் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அதன்படி இந்த 5 பென்னி பங்குகளின் சந்தை மூலதனம் ரூ 1000 கோடிக்கும் குறைவாகவும், அவற்றின் விலை ரூ 20 க்கும் குறைவாகவும் உள்ளது. அதேபோல், இந்த நிறுவனங்களின் வர்த்தக அளவு 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. அந்த வகையில், அந்த பென்னி பங்குகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
குஜராத் டூல்ரூம்: கடந்த வாரம், பென்னி ஸ்டாக் குஜராத் டூல்ரூம் பங்குகளில் நல்ல ஏற்றம் இருந்தது. இதன் தற்போதைய சந்தை விலை ரூ.18.98 ஆக இருக்கும் அதே வேளையில், வாராந்திர லாபம் 28 சதவீதமாக உள்ளது.

தீப்னா பார்மசெம்: இது தவிர கடந்த வாரம் தீப்னா பார்மாசெம் பங்குகள் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியன்று இந்த பென்னி பங்கு ரூ.14.96 ஆக முடிந்தது.
ஜெனெக்ஸ் லேப்ஸ்: 20 ரூபாய்க்கும் குறைவான இந்த மைக்ரோகேப் பங்கு கடந்த வாரம் 19 சதவிகிதம் வாராந்திர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. வெள்ளியன்று ரூ.18.71 என்ற அளவில் முடிவடைந்தது.
ARC ஃபைனான்ஸ்: இதற்குப் பிறகு, வங்கி சாரா நிதி நிறுவனமான ஏஆர்சி ஃபைனான்ஸ் கடந்த வாரம் பங்குகள் 18 சதவீதம் உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.1.51 அளவில் முடிவடைந்தன.
ஃபிராங்க்ளின் இண்டஸ்ட்ரீஸ்: ஃபிராங்க்ளின் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் கடந்த வாரம் 15 சதவீதம் என்ற வாராந்திர உயர்வை எட்டியுள்ளது. அதேசமயம் வெள்ளிக்கிழமை ரூ.2.97 என்ற அளவில் முடிவடைந்தது.
பென்னி பங்குகள் என்றால் என்ன?: பென்னி பங்குகள் மிகவும் குறைந்த விலையில் இருக்கும் பங்குகள், பெரும்பாலும் ஒரு பங்கிற்கு ரூ 20 க்கு கீழ், மேலும் அத்தகைய நிறுவனங்கள் குறைந்த சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளன. ஒரு நிறுவனத்தின் மார்க்கெட் கேப் என்பது சந்தையில் நிலுவையில் உள்ள பங்குகளின் மதிப்பு ஆகும்.
பெரும்பாலான பென்னி பங்குகளுக்கு, மிகக் குறைவான தகவல்களே சந்தையில் கிடைக்கின்றன. சில பெரிய நிறுவனங்களைத் தவிர, மோசமான செயல்திறன் காரணமாக பென்னி பங்குகள் பிரிவில் உள்ளன. அவை மிகவும் குறைந்த விலையில் இருப்பதால், எதிர்காலத்தில் அவை மல்டி பேக்கர்களாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த வகையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பென்னி பங்குகள் சிறப்பான ஏற்றத்தை கொடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications