டெல்லி: Vintron Informatics Limited என்ற பென்னி ஸ்டாக் நிறுவனம் கடந்த 5 ஆண்டு காலத்தில் 9,422 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 0.55 ஐந்து ரூபாய் ஆகும். அதுவே தற்போது 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 52 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு இத்தனை சதவீதம் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 244% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏழு மாதங்களில் இரண்டு மாதங்களை தவிர மீதமுள்ள ஐந்து மாதங்களிலும் இந்த நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி பாதையிலேயே இருந்துள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 51% உயர்ந்திருக்கிறது. ஜூலை 30ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு அதன் 52 வார கால உச்சத்தை எட்டியது அதாவது 52 ரூபாய் ஆகும்.

Vintron Informatics Limited நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சிசிடிவி கேமரா, வைஃபை சம்பந்தப்பட்ட பொருட்கள் , வாகனங்களுக்கான கேமராக்கள், கேமராக்களுக்கான மென்பொருள்கள் என உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக இந்த நிறுவனம் இந்த துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நிறுவனமானது தற்போது பங்குச்சந்தையில் ESM: Stage 2 என்ற நிலையில் இருக்கிறது. அதாவது முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தேசிய பங்குச்சந்தையானது குறிப்பிட்ட நிறுவனங்களை Enhanced Surveillance Measure என்ற பிரிவின்கீழ் வைக்கும். அதில் இந்த நிறுவனம் ஸ்டேஜ் 2வில் இருக்கிறது. அதாவது periodic call auctionகளில், trade-for-trade settlement மற்றும் 2 percent price band என்ற அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.
இந்த நிறுவனத்தை பொருத்தவரை 2024ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 16.51 கோடி ரூபாய் ஆகும், நிறுவனத்தின் வருமானம் 167.5 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ டைரக்ட் தரகு நிறுவனம் இந்த நிறுவன பங்கின் மதிப்பு வளர்ச்சி பாதையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு EPS வளர்ச்சி நிலையானதாக இருக்கிறது என தெரிவிக்கும் ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் இதனை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 395 கோடி ரூபாய் ஆகும். பங்குகளில் 73% பிரமோட்டோர்கள் வசமும் 26 % சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது. பொதுவாக பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வது மிகவும் அபாயகரமானது. பெரிய அளவில் அபாயத்தை ஏற்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் மட்டுமே பென்னி ஸ்டாக்குகளை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இதில் லாபமும் அதிகமாக இருக்கலாம் அதேவேளையில் நஷ்டம் அடைந்தாலும் அதிக நஷ்டமாக இருக்கலாம்.
Story written by: Devika
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications