கடுமையான பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பரவலான வீழ்ச்சிகள் நிலவும் காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்டின் தலைவர் ராதிகா குப்தா முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தை வீழ்ச்சியின் போது கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா தொற்று மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் வாயிலாக முதலீட்டுச் சந்தைகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்த நேரத்தைத் தான் ராதிகா குப்தா குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற மோசமான காலகட்டத்தைச் சமாளிக்க எப்போதும் ஒரு அவசரக்கால நிதியை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், இதேபோல் இக்காலகட்டத்தில் அமைதியாக இருக்கவும் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம், கடைசியாக நீண்ட கால முதலீட்டு இலக்கில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த அணுகுமுறை, மோசமான சந்தை வீழ்ச்சியின் போது பயனுள்ளதாக இருந்தது, இனியும் இருக்கும், என்று ராதிகா குப்தா கூறுகிறார்.
கொரோனா காலத்தில் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மார்டன் முதலீட்டு சந்தையை எதிர்கொள்ள ஒகு பாடத்தை வழங்கியது என்று கூறும் அவர் எப்போதும் ஒரு குடும்பம் போதுமான பண இருப்புக்களைப் பராமரிப்பதன் அவசியத்தை திரும்ப திரும்ப வழியுறுத்திகிறார்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் சவாலான காலங்களைத் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஒவ்வொரு முறையும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போதும் சில மாதங்களில் சரிவில் இருந்து சந்தை மீண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இறுதியில் வெற்றி பெறுவது நிச்சயம், ஆனால் இந்த வெற்றியைச் சுவைக்க நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வியாக உள்ளது.
2008 மற்றும் 2020 சந்தை நெருக்கடிகளுக்கு இணையாக தற்போதைய முதலீட்டுச் சந்தையின் வீழ்ச்சி பார்க்கப்படுகிறது. இதேபோல் ராதிகா குப்தா பிப்ரவரி மாதம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " பங்குச்சந்தை சரிவு ஏற்படும் போது நரகம் போல் இருக்கும், 2008-லும் அப்படிதான் இருந்தது, 2020-லும் அப்படிதான் இருந்தது. ஆனால் நாம் எப்போதும் செய்வது போல் காத்திருந்தால், நாம் அனைவரும் சரிவில் இருந்து மீண்டு வருவோம். கெட்ட நேரங்கள் வெகுநாள் நீடிக்காது. நல்ல முதலீட்டாளர்கள் கட்டாயம் லாபம் அடைவார்கள்." என்று அவர் கூறினார்.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!



Click it and Unblock the Notifications