பங்குச்சந்தையில் வெறும் கையுடன் சென்று பல லட்சங்களை பார்த்தவர்களும் உண்டு, பல லட்சங்கள் உடன் சென்று வெறும் கையுடன் வந்தவர்களும் உண்டு. சரியான நேரத்தில் சரியான நிறுவனத்தில் முதலீடு செய்வது மூலம் அதிகப்படியான லாபத்தை பார்க்க முடியும்.
இப்படி இந்தியாவின் முன்னணி பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிகப்படியான முதலீடு செய்த டாப் 10 பங்குகளும், புதிதாக வாங்கப்பட்ட பங்குகளும் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த பங்குகளில் நீங்களும் முதலீடு செய்துள்ளீர்களா என்பதை கிராஸ் செக் செய்துக்கொள்ளுங்கள்.

மார்ச் 2023 முடிவில் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவை நிர்வாகம் செய்யும் ரேகா ஜுன்ஜுன்வாலா தனது அதிகபட்ச முதலீட்டை டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். டைட்டன் நிறுவனத்தில் மட்டும் ரூ.12,253 கோடி மதிப்பிலான பங்கு இருப்பை கொண்டு உள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்டார் ஹெல்த் ரூ. 6,050 கோடியும், மெட்ரோ பிராண்டுகள் ரூ. 3,326 கோடி மற்றும் டாடா மோட்டார்ஸ் ரூ. 2,475 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டை வைத்துள்ளார். இதை தாண்டி கனரா வங்கி, இந்தியன் ஹோட்டல்கள், ஃபெடரல் வங்கி, என்சிசி மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் ஆகியவை டாப் 10 இடங்களில் உள்ள முக்கிய பங்கு முதலீடுகளாகும்.

இதை தொடர்ந்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ நிர்வாகம் சமீபத்தில் சன் பார்மா அட்வான்ஸ் ரிசர்ச் கம்பெனியில் 1,24,14,38,038 ரூபாயை முதலீடு செய்துள்ளது. மேலும் ராகவ் ப்ரொடக்டிவிட்டி என்ஹேன்சர்ஸ் நிறுவனத்தில் 52,59,00,000 ரூபாய் மதிப்பிலான பங்குகளை கைப்பற்றினார்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications