இந்தியாவின் வாரன் பபெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த வாரம் டைட்டன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போதும் ஒரே நாளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்தது அனைத்து பங்கு முதலீட்டாளர்களுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த நிலையில் தற்போது புதிதாக முதலீடு செய்துள்ளார்..
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா இணைந்து 2019 டிசம்பர் காலாண்டுக்குப் பின்பு முதல் முறையாகச் செப்டம்பர் காலாண்டில் மீண்டும் டைட்டன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
டைட்டன் நிறுவன
டைட்டன் நிறுவனத்தில் ஆரம்பம் முதலே முதலீடு செய்து வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா செப்டம்பர் காலாண்டுக்கு முன்பு 4.81 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், புதிதாகச் செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் டைட்டன் நிறுவனத்தில் இவர்களின் மொத்த பங்கு இருப்பு அளவீடு 4.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குப் பின்பு கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சந்தையில் எந்தப் பொருட்களுக்கு அதிக டிமாண்ட், எந்த நிறுவனம் அதிக வர்த்தகத்தைப் பெற உள்ளது என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஜூன் மாதம் கண்டுபிடித்த ஒரு நிறுவனம் தான் SAIL.
SAIL நிறுவனம்
இந்தியாவில் ஸ்டீல் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா SAIL - steel authority of india நிறுவனத்தில் ஜூன் மாதம் பெரும் தொகையை முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 1.76 சதவீதம் பங்குகளைக் கைப்பற்றினார்.
300 கோடி ரூபாய்
தற்போது கூடுதலாக முதலீடு செய்து மொத்தம் 1.76 சதவீத steel authority of india பங்குகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த 1.76 சதவீத பங்குகளின் இன்றைய மதிப்பு கிட்டதட்ட 300 கோடி ரூபாய். இன்றைய வர்த்தகத்தில் steel authority of india நிறுவனத்தின் பங்குகள் 0.59 சதவீதம் சரிந்து 118.75 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
ஜுன்ஜுன்வாலா குடும்பம்
இதேபோல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா செப்டம்பர் காலாண்டில் MCX மற்றும் லுப்பின் ஆகிய நிறுவனப் பங்குகளில் செய்த முதலீட்டை முழுமையாகத் திரும்பப்பெற்றுள்ளார். மேலும் இவ்விரு நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளது ஜுன்ஜுன்வாலா குடும்பம்.