நம் பங்குச்சந்தையில் சரியான பங்கினை தேர்வு செய்து முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும். அந்த வகையில் நம்பினோரை கைவிடாத பங்குகளை மல்டிபேக்கர் பங்கு என அழைக்கிறோம். முதலீட்டாளர்கள் சிறந்த லாபத்தை தந்த ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 10% அதிகரித்து ரூ.58.25ஐ எட்டி, நான்கு வார உச்சத்தை அடைந்தது. வர்த்தக அளவுகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, இந்த முன்னேற்றத்திற்கு காரணம். இந்த நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான ரிவோல்ட் மோட்டார்ஸ், ஆகஸ்ட் மாதத்தில் வலுவான முன்பதிவுகளைப் பெற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்நிறுவன பங்கு வேகமாக வளர்ச்சியை கண்டது . குறிப்பாக ஒரே நாளில் 10% உயர்ந்தது.

ரிவோல்ட், 'பெட்ரோலில் இருந்து ஆசாதி’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதன் கீழ் ரூ.20,000 வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டன. சமீபத்திய அறிக்கையின்படி, மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது தெரிய வருகிறது. ரிவோல்ட்டின் AI-இயக்கப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்களின் அனைத்து மாடல்களுக்கும் பூஜ்ஜிய காப்பீட்டு கட்டணம் மற்றும் கூடுதல் சேமிப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
ரிவோல்ட்டின் தயாரிப்பு வரிசையில் RV400, RV400 BRZ, RV1, RV1+ மற்றும் RV BlazeX ஆகியவை அடங்கும். இந்த மாடல்கள் அனைத்தும் இந்திய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இணைப்பு தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஓட்டுநர் முறைகள் மற்றும் குறைந்த இயக்க செலவுகளைக் கொண்டுள்ளன.
200க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் ரிவோல்ட் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. இது நாடு முழுவதும் மின்சார இருசக்கர வாகனப் புரட்சியை முன்னெடுக்கும் அதன் இலக்கைக் காட்டுகிறது. 2023 ஜனவரியில் ரத்தன்இந்தியா, ரிவோல்ட் பிராண்டின் 100% பங்குகளை வாங்கியது. அதன் பிறகு, உள்நாட்டு உற்பத்தியை இருமடங்காக உயர்த்தியுள்ளது. தற்போது, ரிவோல்ட் நாடு முழுவதும் 185 நகரங்களில் 211 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. மேலும் புதிய நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
ஜூன் காலாண்டில், ரிவோல்ட் 50,000ஆவது மின்சார இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. FY25 இல் 12,322 யூனிட்களை விற்பனை செய்தது. இது FY24 ஐ விட 56% அதிகமாகும்.மின்சார வாகனங்களைத் தாண்டி, ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் மின் வணிகம் (கோகோப்ளூ ரீடைல்), ஃபின்டெக் (வெஃபின்), ஃபேஷன் (நியோபிராண்ட்ஸ்) மற்றும் ட்ரோன்கள் (நியோஸ்கை) போன்ற புதிய கால வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய ஐந்து ஆண்டுகளில், நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 900% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து இந்த பங்கு வலுவான ஏற்றத்தை கண்டு, 53% வரை உயர்ந்துள்ளது.
நிதி ரீதியாக, FY26 இன் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.502 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.851 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் ரூ.2,313 கோடியாக இருந்தது. இது ஜூன் 2024 காலாண்டில் ரூ.2,494 கோடியாக இருந்தது. ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த பங்காக இருக்கலாமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications