மும்பை: இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சமீபத்திய நாட்களாக கடும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. எனினும் இந்த காலகட்டத்திலும் சில பங்குகளை வாங்க தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அதன் தாக்கம் என்பது இந்திய சந்தையில் இருந்து வருகின்றது.
தொடர்ந்து இந்திய சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்டாலும், வலுவாக காணப்படும் நிலையில், அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது அதிகமாக இருந்து வருகின்றது.
வட்டி அதிகரிக்கலாம்
இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் நிலவரம் என்ன?
சென்செக்ஸ் குறியீடானது கடந்த மார்ச் 2023 வரையிலான 12 மாதங்களில் 0.7% ஆக ஏற்றம் கண்டுள்ளது. எனினும் பி எஸ் இ மிட் கேப் மற்றும் பி எஸ் இ ஸ்மால் கேப் குறியீடானது 0.2 சதவீதம் மற்றும் 4.5% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளன. இதே காலகட்டத்தில் பி எஸ் இ 500 இன்டெக்ஸ் ஆனது 2.30 சதவீதம் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
அடையாளம் காணப்படலாம்
எனினும் வலுவான ஏற்றத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் இன்னும் நல்ல திறன் கொண்ட பங்குகளை வாங்க அடையாளம் காணலாம். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தை ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.
சமீபத்திய மாதங்களில் கிராமப்புற ஊதியங்கள் வலுவாக காணப்படுகின்றன. இது கிராமப்புற தேவையை ஊக்குவிக்கலாம். எனினும் மழைப்பொழிவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதாற்கிடையில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 5.6% ஆக இருக்கலாம் எனவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது. மொத்தத்தில் இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
என்னென்ன பங்குகள்?
இதற்கிடையில் கோடக் இன்ஸ்டிடியூசனல் தரகு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் 20% மேலாக ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
இதே பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது 10.5% ஏற்றத்திலும், கியூமின்ஸ் இந்தியா பங்கு விலையானது 11.1%, இன்ஃபோசிஸ் விலை 19.1% ஆகவும், சன் பார்மா பங்கு 16%மும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பங்குகள்?
ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலையானது இலக்கு விலையாக 3564 ரூபாயாகவும், இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 28% ஏற்றம் காணலாம். கிரெடிட் அக்சஸ் கிராமீனில் 40% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இதன் இலக்கு விலையாக 1290 ரூபாயாகவும்,
கோத்ரேஜ் கன்சியூமர், ஹெச் டி எஃப் சி வங்கி, டாடா கன்சியூமர், ரோஸாரி பயோடெக் உள்ளிட்ட பங்குகள் 15%, 21.70% மற்றும் 34.5% மற்றும் 24% எனும் அளவுக்கு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications