நம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி. 20 ஆண்டுகளுக்கு முன்பு, முகேஷ் அம்பானியை காட்டிலும் இவர் தான் வணிகத்தில் கொடி கட்டி பறந்தார். ஆனால் தவறான முதலீடு, நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது போன்ற காரணங்களால் இன்று அனில் அம்பானியின் நிலை, எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்று பலரும் நினைக்கும் அளவுக்கு உள்ளது. கடன் நெருக்கடியால் அனில் அம்பானி சிக்கி தவிக்கிறார்.
ஆனாலும் மனுஷன் கொஞ்சம் கூட நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து தனது வர்த்தக நிறுவனங்களை வெற்றி பாதைக்கு திருப்பும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதன் பலனாக அவரது சில நிறுவனங்கள் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் பல கடனிலிருந்து விடுபட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டியுள்ளன.

எடுத்துக்காட்டாக, அனில் அம்பானியின் மிகவும் விருப்பமான நிறுவனமான ரிலையன்ஸ் பவர் கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,947.83 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.2,068.38 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. நிறுவனங்கள் மெல்ல மெல்ல வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியிருப்பது அனில் அம்பானிக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.
இருப்பினும், வரும் 23ம் தேதி அனில் அம்பானிக்கு மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அந்த கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள முக்கியமான ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர். இந்நிறுவனம் மின்சாரம்,சாலைகள்,மெட்ரோ ரயில் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறைகளுக்கு பொறியியல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் அதன் சிறப்பு நோக்க பிரிவுகள் மூலம் பாதுகாப்பு துறை மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
2024 டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ரூ.3,298.35 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த விவாதிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் அனில் அம்பானிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.72 சதவீதம் உயர்ந்து ரூ.279.15ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications