SME ஐபிஓக்களுக்கான விதிமுறைகளை செபி கடுமையாக்குகிறது. அந்த வகையில், ப்ரோமோட்டர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இனி ஐபிஓ நிதியைப் பயன்படுத்த முடியாது என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல கடுமையான விதிகளை செபி இன்று வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் எஸ்எம்இ ஐபிஓக்கள் சாதனை அளவில் இயங்கி வருவதால், முதலீட்டாளர்களும் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்வதற்கு போட்டியிடுவதால் சில முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக SME IPOகளுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிறு நடுத்தர நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு இயக்க லாபம் இருக்க வேண்டும் என்று புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இனிமேல், புரமோட்டர்கள் மற்றும் ப்ரோமோட்டர் குழுக்கள் IPO நிதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தக் கூடாது.
ஒரு ஐபிஓ நடத்த உத்தேசித்துள்ள ஒரு SME நிறுவனம், முந்தைய மூன்று நிதியாண்டுகளில் குறைந்தபட்சம் இரண்டில் குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கு இயக்க வருமானம் (வட்டி, தேய்மானம் மற்றும் வரிக்கு முந்தைய வருவாய்) பெற்றிருக்க வேண்டும்.
ஒரு ஐபிஓவில் விற்பனைக்கான சலுகை வெளியீட்டு அளவின் 20 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
பங்குதாரர்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்குகளை விற்க முடியாது.
பொது நிறுவன நோக்கங்களுக்காக IPO மூலம் கிடைக்கும் வருமானத்தில் 15 சதவீதம் அல்லது ரூ. 10 கோடி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஐபிஓ வரைவுத் தாள்கள் 21 நாட்களுக்கு பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும். அவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற வேண்டும்.
நிறுவன சாராத முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்வது, முக்கிய போர்டு ஐபிஓக்களில் பயன்படுத்தப்படும் அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
விற்பனைக்கான சலுகை வெளியீட்டு அளவின் 20-25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதேசமயம், SME ஐபிஓக்களுக்கான குறைந்தபட்ச விண்ணப்ப வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்த கடந்த மாதம் செபி முன்மொழிந்தது. தற்போது இது ரூ. 1 லட்சம். ஆகும்
SME ஐபிஓக்களின் சாதனை எண்ணிக்கை இந்த ஆண்டு சந்தையில் சலசலப்பை உருவாக்கியது. இதுவரை 225 நிறுவனங்கள் ரூ. 8,200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 4,686 கோடி ஆகும்.
SME ஐபிஓக்கள் முதல் நாளில் பெரிய பட்டியல் ஆதாயங்களை வழங்குவதால், முதலீட்டாளர்கள் வெகுவிரைவாக ஐபிஓவில் முதலீடு செய்கின்றனர். இதன் விளைவாக, இந்த ஐபிஓக்கள் நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாக முதலீடுகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செபி விதிகளை கடுமையாக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, SME ஐபிஓக்களின் பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளில் 90 சதவீதத்திற்கு மேல் வர்த்தகம் செய்யக்கூடாது என்ற விதியை செபி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications