வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.
நேற்று (20 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,544 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,767 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,976 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 162 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,707 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஆசிய சந்தைகள்
இன்று (21 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஹாங் காங் நாட்டின் ஹேங் செங் 0.75 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (21 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.13 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.79 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.58 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
BSE நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 20 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 10 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,835 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,365 பங்குகள் ஏற்றத்திலும், 1,297 பங்குகள் விலை இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 115 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், என் டி பி சி, ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டி சி எஸ், ரிலையன்ஸ், நெஸ்லே, ஹெச்டிஎல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.