நாம் ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் சொல்லி இருப்பது போல சென்செக்ஸ், தன் கொரோனாவுக்குப் பிந்தைய உச்சமாக, 33,887 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.
ஆனால் அதற்குப் பின், மீண்டும் 33,887 புள்ளிகளைக் கடப்பது போன்ற சூழல் சென்செக்ஸில் உருவானதாகத் தெரியவில்லை.
ஆனால் இன்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் 30,932 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் 31,000-ஐ தொடவில்லை என்கிற வருத்தம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைய வர்த்தக நிலவரம் என்ன? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலவரம்
நேற்று மாலை சென்செக்ஸ், 30,818 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,765 புள்ளிகள் வரைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் 30,932 புள்ளிகளைத் தொட்டு 114 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இன்னும் ஒரு 68 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தால் 31,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டதாக மகிழ்ச்சி அடைந்து இருக்கலாம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,414 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,329 பங்குகள் ஏற்றத்திலும், 912 பங்குகள் இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
துறை சார் இண்டெக்ஸ்
நிஃப்டியின் துறை சார் இண்டெக்ஸ்களில் வங்கி, நிதி சேவைகள், தனியார் வங்கி மற்றும் ரியாலிட்டி தவிர மற்ற எல்லா துறைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. குறிப்பாக ஆட்டோ மற்றும் எஃப் எம் சி ஜி துறை சார் இண்டெக்ஸ்களும் முறையே 2.6 % & 2.1 % ஏற்றத்தில் வர்த்தகமாயின
ஐரோப்பிய சந்தைகள்
இன்று மே 21, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.64 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.93 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.34 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நேற்று எல்லாமே ஏற்றத்தில் நிறைவடைந்த போதிலும், இன்று மீண்டும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கம் கண்டு வருவது, இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ஐ டி சி, ஹிண்டால்கோ, ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ் இண்ட் பேங்க், என் டி பி சி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
டாலர் & கச்சா எண்ணெய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்னும் 75.5 ரூபாய்க்குக் கீழ் வரவில்லை. தற்போது 75.61 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 35 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications