கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 39,728 புள்ளிகளில் இருந்து 40,707 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. ஆனால் இன்று சென்செக்ஸ் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று (21 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,707 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,531 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,721 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 148 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,558 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
BSE நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 11 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 19 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,793பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,394 பங்குகள் ஏற்றத்திலும், 1,248 பங்குகள் விலை இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 107 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் என் டி பி சி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஆசிய சந்தைகள்
இன்று (22 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங் செங், தைவானின் தைவான் வெயிடெட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கி 0.70 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (22 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.18 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.07 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.26 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தோடு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.