ஏப்ரல் 08, 2020, புதன்கிழமை, மாலை சென்செக்ஸ், 29,893 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் 30,571 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அந்த கேப் அப் ஏற்றத்தை இப்போது வரை தக்க வைத்து கொண்டு வர்த்தகமாகிறது.
அதிகபட்சமாக 30,847 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ். இது 954 புள்ளிகள் ஏற்றம். ஆனால் தற்போது சுமாராக 915 புள்ளிகள் ஏற்றத்தில் 30,809 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ் 30 பங்குகள்
சென்செக்ஸ் இண்டெக்ஸில் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 29 பங்குகள் ஏற்றத்திலும், 01 பங்கு இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,927 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,533 ஏற்றத்திலும், 291 பங்குகள் இறக்கத்திலும், 103 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
ஏப்ரல் 08, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் மீண்டும் 2.58 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 0.47 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.10 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.23 % இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஐரோப்பிய நாட்டுச் சந்தைகள் அமெரிக்கா ஓரளவுக்கு தேறினாலும், ஐரோப்பிய சந்தைகள் இன்னும் தேறவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
ஆசிய சந்தைகள்
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட் போன்றவைகள் எல்லாம் சுமாராக 0.05 - 0.69 % வரை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற ஆசிய சந்தைகள் எல்லாம் 0.28 - 2.59 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
டாடா மோட்டார்ஸ், சிப்லா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், மாருதி சுசூகி, வேதாந்தா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹிந்துஸ்தான் யுனிலிவர், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஏற்றம் காணலாம்
இப்போது வரை சென்செக்ஸ் தன் கேப் அப் ஏற்றத்தை விடவில்லை, ஏற்றமும் நிலையாகத் தான் தெரிகிறது. அதோடு அமெரிக்க சந்தைகள் நேற்று நல்ல ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே இன்று இந்திய சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைய வாய்ப்பு இருக்கிறது.
மதியத்துக்கு மேல் ஜாக்கிரதை
நேற்று ஐரோப்பிய சந்தைகள், பெரிய ஏற்றம் காணவில்லை, எனவே, இன்று மதியம் ஐரோப்பிய சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கினால், இந்திய சந்தைகளின் நிலவரம் மாறலாம். எனவே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜாக்கிரதையாக வியாபாரம் செய்யவும். குறிப்பாக மதியத்துக்கு மேல் உஷாராக இருக்கவும்.