இறக்கத்தில் சந்தை..! அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த அக்டோபர் 09, 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் பெரிய சரிவுகளைக் காணாமல் அப்படியே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 30, 2019 முதல் இன்று வரை சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அக்டோபர் 31, 2019-ல் இருந்து இன்று வரை சந்தையின் குறைந்தபட்ச புள்ளியே 40,014 தான். ஆக கடந்த ஐந்து வர்த்தக நாட்களாக சந்தை 40,00 புள்ளிகளுக்கு மேல் அத்தனை வலுவாக வர்த்தகமாகி வருகிறது.

இருப்பினும் ஹெச் டி எஃப் சி, ரிலையன்ஸ் போன்ற அதிக வெயிட்டேஜ் பங்குகளே இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் சென்செக்ஸும் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

இறக்கத்தில் சந்தை..! அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..!

உலக பொருளாதார காரணிகளான அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இப்போது 70.72-க்கு வர்த்தகமாகி வருவது பாசிட்டிவ் செய்தியாக இருக்கிறது. ஆனால் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.31 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சின்ன எச்சரிக்கையாகவே பார்க்கிறது இந்திய சந்தை.

நேற்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 40,301 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,445 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 145 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 40,200 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 100 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி இண்டெக்ஸ் நேற்று மாலை 11,941 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே நிஃப்டி 11,974 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கியது. அந்த இறக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 11,903 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 37 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,266 பங்குகள் வர்த்தகமாகின்றன. 989 பங்குகள் ஏற்றத்திலும், 1,151 பங்குகள் இறக்கத்திலும், 126 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. 2,345 பங்குகளில் 43 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 65 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் பொதுத் துறை வங்கி தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்களும் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மீடியா, பார்மா போன்ற இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் இறக்கம் காண வைத்துக் கொண்டு இருக்கின்றன.

யூபிஎல், யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், சன் பார்மா, ஈஷர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex starts to melt down from its 40300 mark points

The Bombay stock exchange sensex 30 starts to melt down from its 40300 mark points
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X