நேற்று மாலை, சென்செக்ஸ் 39,044 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,161 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இப்போது வரை இது தான் இன்றைய உச்சப் புள்ளியாக இருக்கிறது.
அதன் பின், 39,037 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு இருக்கிறது. தற்போது 39,110 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸாக சென்செக்ஸ் 30-ல் இன்றைய வர்த்தகத்தில் எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? மற்ற நாட்டுப் பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்
மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஓ என் ஜி சி, எஸ் பி ஐ, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,414 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,248 பங்குகள் ஏற்றத்திலும், 1,017 பங்குகள் விலை இறக்கத்திலும், 149 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 112 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று, வங்கி, ஐடி, மீடியா தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல், மெட்டல், ரியாலிட்டி போன்ற செக்டார்கள் 0.40 % சதவிகிதத்துக்கு மேல், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த செக்டார்கள், இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
பங்குச் சந்தைகள் - ஆசியா
இன்று (16 செப்டம்பர் 2020), ஆசியாவில், ஹாங்காங்கின் ஹேங் செங், தென் கொரியாவின் கோஸ்பி, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் 1.21 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.