இந்த மாதத்தின் முதல் வர்த்தக நாளில், சென்செக்ஸ் 38,900 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த மாதத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று மாலை, சென்செக்ஸ் 39,086 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று காலை 39,165 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,236 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 39,061 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று சென்செக்ஸின் 30 பங்குகள் நிலவரம் என்ன? ஆசிய பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? எந்த இண்டெக்ஸ் இன்றைய சந்தை ஏற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.
இண்டெக்ஸ்
இன்று வங்கி, நிதி சேவைகள், மெட்டல், பொதுத் துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆட்டோமொபைல், எஃப் எம் சி ஜி, ஐடி, மீடியா, பார்மா போன்ற செக்டார்கள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (3 செப்டம்பர் 2020), ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட், தென் கொரியாவின் கோஸ்பி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தென் கொரியாவின் கோஸ்பி 1.33 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்
டைடன்,
மாருதி சுசூகி,
டெக் மஹிந்திரா,
ஏஷியன் பெயிண்ட்ஸ்,
டிசிஎஸ்,
ஹெச்சிஎல் டெக்,
போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஐசிஐசிஐ பேங்க்
பார்தி ஏர்டெல்,
என் டி பி சி,
பவர் கிரிட் கார்ப்பரேஷன்,
இண்டஸ் இண்ட் பேங்க்
போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,582 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,391 பங்குகள் ஏற்றத்திலும், 1,025 பங்குகள் விலை இறக்கத்திலும், 166 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 81 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.