கொரோனா வைரஸ் பிரச்சனைக்குப் பின், 30 ஏப்ரல் 2020 அன்று சென்செக்ஸ் 33,887 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.
அதன் பின் 08 ஜூன் 2020 அன்று 34,927 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ். அதன் பின் ஏற்றம் இறக்கம் என்று வர்த்தகமானது.
இன்று ஒரு வழியாக சென்செக்ஸ் அதிகபட்சமாக 35,213 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 34,911 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சரி இன்றைய சந்தை நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
கடந்த வெள்ளிக் கிழமை மாலை சென்செக்ஸ், 34,731 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,892 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 34,794 புள்ளிகள் வரைத் தொட்டது. உச்சப் புள்ளியாக 35,213 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் கொஞ்சம் சரிந்து 34,911 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. வெள்ளிக் கிழமை குளோசிங் உடன் ஒப்பிட்டால் 179 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,917 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,858 பங்குகள் ஏற்றத்திலும், 898 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 133 பங்குகள் தங்களின் கடந்த 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 22, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.25 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.31 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.26 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் தைவானின் தைவான் வெயிடெட் சந்தையைத் தவிர மற்ற எல்லா பக்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோல் இந்தியா, வேதாந்தா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. விப்ரோ, கெயில், ஓ என் ஜி சி, ஹெச் டி எஃப் சி, டி சி எஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.