கொஞ்சம் பதற்றமாக வர்த்தகமாகத் தொடங்கினாலும், சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று 38,178-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் இன்று 38,140-க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது முதலீட்டாளர்களுக்கு ஒரே ஜாலி தான்.
இந்த வாரத்தின் நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ், 1120 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சரி அது என்ன யெஸ் பேங்க் விலை சரிவு?
யெஸ் பேங்க்
யெஸ் பேங்கில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் நீக்கி, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முதலீடு தேவையாக இருந்தது. இந்த முதலீட்டுப் பணத்தை திரட்ட FPO அறிவித்தார்கள். FPO அறிவித்ததில் இருந்து யெஸ் பேங்க் பங்கு விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது.
பங்கு விலையில் எதிரொலி
FPO-க்கு விண்ணப்பித்தவர்களில் பலரும் 12 ரூபாய்க்கே விண்ணப்பித்து இருப்பதால், யெஸ் பேங்க் பங்கு விலையும் 12 ரூபாய்க்கு போய்விடுமோ என்கிற பயத்தில், யெஸ் பேங்க் பங்கை விற்றுத் தள்ளி இருக்கிறார்கள். ஆனால் வாங்கத் தான் ஆள் இல்லை. எனவே இன்று ஒரே நாளில் யெஸ் பேங்க் 19.18% சரிந்து இருக்கிறது. எந்த பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாயின?
பங்கு விலை நிலவரம்
ஈஷர் மோட்டார்ஸ், எஸ் பி ஐ, ஐ சி ஐ சி ஐ பேங்க், ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்பப்ரேஷன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆக்ஸிஸ் பேங்க், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
சென்செக்ஸ் 30 பங்குகள்
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 22 பங்குகள் விலை ஏற்றத்திலும், 08 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,812 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,454 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,204 பங்குகள் விலை இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.