ஜூன் மாதத்தின் நான்காவது வாரம் ஒரு வழியாக ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.
ஆனால் மீண்டும் ஒரு கொரோனாவுக்குப் பிறகான் உச்சத்தைத் தொட்டு நிறைவடையவில்லை என்கிற வருத்தமும் நம் முதலீட்டாளர்களுக்கு நிறையவே இருக்கிறது.
சரி இன்று சென்செக்ஸில் என்ன நடந்தது, உலக சந்தைகளின் நிலவரம் என்ன? எந்த பங்குகள் தூள் கிளப்பின..? வாருங்கள் வரிசையாகப் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 34,842 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,144 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,910 புள்ளிகள் வரைத் தொட்டு லைட்டாக முதலீட்டாளர்கள் வயிற்றில் பகீர் கிளப்பியது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 35,171 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 329 புள்ளிகள் ஏற்றம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், வெறும் 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,865 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,619 பங்குகள் ஏற்றத்திலும், 1,097 பங்குகள் இறக்கத்திலும், 149 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 130 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
இன்று, ஜூன் 26, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 1.58 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.58 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.92 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இது கூட நம் இந்திய சந்தைகள் ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
பங்கு விலை நிலவரம்
இன்ஃபோசிஸ், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், ஐ டி சி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.