கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று தடுமாறிக் கொண்டு இருக்கிறது. நேற்று மாலை 37,981 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 38,176 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
இன்று சென்செக்ஸ் உச்சபட்சமாக 38,235 புள்ளிகள் வரை அதிகரித்தது. தற்போது, நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 45 புள்ளிகள் இறக்கம் கண்டு 37,936 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் நிலவரம் என்ன? வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாங்க பாப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 19 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,359 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 927 பங்குகள் ஏற்றத்திலும், 1,293 பங்குகள் விலை இறக்கத்திலும், 139 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 88 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று ஆட்டோமொபைல், ஐடி, மெட்டல் தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி, ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் கொஞ்சம் பலத்த இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சென்செக்ஸ் தடுமாற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (29 செப்டம்பர் 2020) ஆசியாவில், ஹாங்காங் நாட்டின் ஹேங் செங் பங்குச் சந்தை தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 0.98 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (28 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.46 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.40 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.22 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 1.87 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.