கலக்கும் பங்குச் சந்தை.. முதலீட்டாளர்களுக்கு அடித்த யோகம்.. சென்செக்ஸ், நிஃப்டி டாப்.!!

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையான இன்று (மார்ச் 18) 850 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் சற்றே முன்னேற்றம் கண்டது. அதன்படி, மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மதியம் 12.20 மணி நிலவரப்படி 850 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 74,997 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி 233 புள்ளிகள் உயர்ந்து 22,700 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகின்றன. இது ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, சீனப் பொருளாதாரம் குறித்த நம்பிக்கையின் மத்தியில் இந்த குறியீடுகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன.

கலக்கும் பங்குச் சந்தை.. முதலீட்டாளர்களுக்கு அடித்த யோகம்.. சென்செக்ஸ், நிஃப்டி டாப்.!!

ஆரம்ப வர்த்தகத்தில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 490.12 புள்ளிகள் உயர்ந்து 74,660.07 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதேபோல், நிஃப்டி 162.55 புள்ளிகள் உயர்ந்து 22,671.30 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் குறியீடு உயர்வு மூலம், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, சொமாட்டோ மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் முக்கியமான வளர்ச்சியை பெற்றன. பங்குச் சந்தையில் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் நிலவி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதே ட்ரெண்ட் தொடருமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இருப்பினும், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை பின்தங்கியிருந்தன.

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.4.03 லட்சம் கோடி அதிகரித்து ரூ.397.20 லட்சம் கோடியை எட்டியது. ஆனால் ஐடி பங்குகள் 0.3% என்ற சிறிய வீழ்ச்சியை கண்டன. எச்சிஎல் டெக்னாலஜிஸ் 0.6% சரிந்தது, டிசிஎஸ் 0.3% சரிந்தது. இதற்கிடையில், சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் பலவீனமான அமெரிக்க டாலர் ஆதரவுடன் உலோகக் குறியீடு 1.1% உயர்ந்தது. ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் 2% க்கும் அதிகமாக உயர்ந்து, நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக உருவெடுத்தது.

Take a Poll

அதேபோல், அமெரிக்க கட்டணங்கள், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் மற்றும் தொடர்ச்சியான புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாகவும், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் கூட்டம் இன்று இரவு(மார்ச் 18) தொடங்கவுள்ள நிலையில், பெடரல் ரிசர்வ் புதன்கிழமை தனது வட்டி விகித முடிவை அறிவிக்க உள்ளது, சந்தைகள் பரவலாக விகிதங்கள் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வர்த்தகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் எதிர்கால விகிதக் குறைப்பு, வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்த பெடரல் ரிசர்வின் பொருளாதார கணிப்புகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

திங்கட் கிழமையான நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் பங்குச் சந்தைகளில் எழுச்சியும், சியோல் பங்குச் சந்தையில் உயர்வை நோக்கி செல்கிறது. சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+