விரைவில் 94000 புள்ளிகளை தொடப்போகும் சென்செக்ஸ்.. இனி ஆட்டமே வேற லெவல்.!!

இந்தியப் பங்குச் சந்தையை, 'நியூட்ரல்' நிலையிலிருந்து 'ஓவர்வெயிட்' நிலைக்கு HSBC நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஓராண்டுக்குப் பிறகு, சந்தை மீண்டெழுந்து வருவதாகவும், சென்செக்ஸ் 94,000 புள்ளிகளை எட்டும் என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 2024 செப்டம்பர் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. உலகின் மிக மோசமான செயல்திறன் கொண்ட சந்தைகளில் ஒன்றாகவும் இது கருதப்பட்டது.

ஆனால், இப்போது சந்தை மீண்டு வருவதாக HSBC ஆய்வாளர் ஹெரால்ட் வான் டெர் லிண்டே கூறியுள்ளார். ஆசிய உத்திகள் குறித்த தனது குறிப்பில், சந்தை மதிப்பீடுகள் இனி கவலைக்குரிய விஷயம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் 94000 புள்ளிகளை தொடப்போகும் சென்செக்ஸ்.. இனி ஆட்டமே வேற லெவல்.!!

உள்நாட்டு கொள்கைகள் வளர்ச்சிக்குச் சாதகமாக மாறியுள்ளதாகவும், வரிக் குறைப்புகள் நுகர்வுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் வான் டெர் லிண்டே தெரிவித்துள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் மென்மையான கொள்கையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"வருமான வரி குறைப்பு மற்றும் சமீபத்திய ஜிஎஸ்டி மறுசீரமைப்பு போன்ற பல நடவடிக்கைகள் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்" என்று HSBC அறிக்கை குறிப்பிட்டது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகள், டிரம்ப் வரிக்கொள்கைகள், மற்றும் உள்நாட்டு வளர்ச்சிக் குறைவு ஆகியவை இந்தியச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தின.

குறிப்பாக, நிறுவனங்களின் வருவாய் இன்னும் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், சந்தை மதிப்பீடுகள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தின. ஆனால், நிலைமைகள் மாறி வருவதாக HSBC கூறியுள்ளது. வளர்ச்சி எதிர்பார்ப்புகள் மிதமாகியுள்ளன.

2025-ஆம் ஆண்டுக்கான வருவாய் கணிப்புகள் கடுமையாகக் குறைந்து, ஒருமித்த மதிப்பீடுகள் 12 சதவீதமாக இருப்பதாகவும், மேலும் 8-9 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், சந்தை மதிப்பீடுகள் இனி கவலையாக இருக்காது என்று அந்த முதலீட்டு நிறுவனம் கருதுகிறது. "பெரும்பாலான வெளிநாட்டு நிதியங்கள் இந்தியாவில் குறைவாகவே முதலீடு செய்துள்ளன" என்று குறிப்பு தெரிவிக்கிறது.

இது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகக் காட்டுகிறது. டிரம்ப் வரிக்கொள்கைகள் ஒரு பெரிய சுமையாக இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டுத் தன்மை கொண்டவையாக இருப்பதால், அது நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சி படிப்படியாக இருந்தாலும், குறைந்த பணவீக்கம், கொள்கை ஆதரவு மற்றும் மிதமான மதிப்பீடுகளுடன், இந்தியா பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும் என்று HSBC நம்புகிறது. இன்று நிஃப்டி, சென்செக்ஸ் இரண்டு மாதங்களில் மிக நீண்ட இழப்புப் பதிவை எட்டியுள்ளது.

இதற்கிடையில், இன்றைய நிலவரப்படி 9,21 மணியளவில் சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் 4 புள்ளிகள் சரிவில் 81,872 புள்ளிகளாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+