இந்திய பங்குச்சந்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை காரணங்களால் அதிகப்படியான தடுமாற்றத்தையும் சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் அதிகப்படியான குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சரியான வழிக்காட்டுதல், சரியான ஐடியா எந்த அளவுக்கு முக்கியம் என்பது தற்போது சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில் 12,363 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை கொண்ட 6 முக்கிய பண்ட்களை நிர்வாகம் செய்யும் டாடா மியூச்சவல் பண்ட் நிறுவனத்தின் பண்ட் மேனேஜர் மீட்டா ஷெட்டி முக்கியமான தரவுகளை முதலீட்டாளர்களுக்கு கூறுகிறார்.

மீட்டா ஷெட்டி டாடா டிஜிட்டல் இந்தியா, டாடா போகஸ்டு ஈக்விட்டி, டாடா இந்தியா பார்மா & ஹெல்த்கேர், டாடா லார்ஜ் & மிட் கேப் என 6 பண்ட்களை நிர்வாகம் செய்து வருகிறார். மீட்டா ஷெட்டி கணிப்பில் 2023 ஆம் ஆண்டும் கடந்த ஆண்டை போலவே இருக்கும் எனவும் சந்தை அதிகப்படியான உயர்வுக்கும், சரிவுக்கும் செல்லும். இதோடு அதிகப்படியான தடுமாற்றத்தை கொண்டு இருக்கும் என மனிகன்டோர்ல்-க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமெனில் எந்த பிரிவில், எந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மீட்டா ஷெட்டி, ஏற்கனவே கூறியது போலவே 2023 ஆம் ஆண்டும் 2022 போலவே அதிகப்படியான தடுமாற்றம் கொண்டு இருக்கும் என்பதால் இந்த தடுமாற்றம் நம்முடைய முதலீட்டை பாதிக்காத வண்ணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறிய அவர். முதலீட்டை 3 விதிமாக பிரித்து மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார்.

முதலில் நாங்கள் எங்களுடைய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இப்போதைய காலக்கட்டத்தில் பரிந்துரை செய்வது பேலென்ஸ் அட்வான்டேஜ் பண்ட் இது கட்டாயம் சந்தை தடுமாற்றத்தின் பாதிப்பை குறைக்கை வழி வகுக்கும். 2வதாக ஒரே மார்கெட் கேப்-ல் முதலீடு செய்யாமல் கலந்து முதலீடு செய்ய வேண்டும். flexi-cap அல்லது multi-cap fund, focused fund மற்றும் large & mid-cap fund-களில் முதலீடு செய்வது மூலம் கூடுதல் லாபத்தையும், நிலையான லாபத்தையும் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
3வதாக துறைவாரியான முதலீடுகள், இப்பிரிவு முதலீட்டில் ஆபத்து அளவு சற்று அதிகமாக உள்ளது மறக்க வேண்டாம். தற்போது இன்பரா, வங்கியியல் துறையில் முதலீடு செய்யலாம். வித்தியாசமாக யோசிக்கும் முதலீட்டாளர் என்றால் பார்மா துறையில் கூட முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் உங்களுடைய மொத்த முதலீட்டையும் பங்குச்சந்தையில் செய்ய கூடாது என்பதையும் தெளிவாக கூறும் மீட்டா ஷெட்டி மொத்த முதலீட்டு தொகையான 10 லட்சம் ரூபாயில் தற்போதை சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப பங்குச்சந்தையில் 66 சதவீதமும், கடன் சந்தையில் 31 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும் என முதலீட்டாளர்களை அறிவுறுத்துகிறார்.

மேலும் துறைவாரியான பங்கு முதலீட்டுக்கு குறைந்த பட்ச முதலீட்டு காலம் 3 முதல் 5 வருடம் என்பதையும் கூறுகிறார். மேலும் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யும் 66 சதவீத தொகையை மேலே குறிப்பிட்ட 3 பிரிவுகளில் தனித்தனியாக பிரித்து முதலீடு செய்வது உத்தமம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications