பொதுவாக பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நிறுவன முதலீட்டில் எந்த அளவுக்கு லாபம் கிடைக்கிறது என்பதை தாண்டி அந்த நிறுவனம் அளிக்கும் டிவிடெண்ட் அதாவது ஈவுத்தொகையின் அளவையும், ஈவுத்தொகை அளிக்கப்படும் கால இடைவெளி பொருத்தும் நீண்ட கால முதலீட்டில் ஒரு முதலீட்டாளரை வைத்திருக்கும்.
மேலும் பல முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் டார்கெட் செய்து முதலீடு செய்யும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர். இப்படி இந்த வாரம் டிவிடெண்ட் தரப்போகும் 3 நிறுவனங்கள் பட்டியலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

1. குஜராத் கேஸ் லிமிடெட்: குஜராத் கேஸ் லிமிடெட்ஒரு மிட் கேப் எரிவாயு விநியோக நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனம் 31,865 கோடி மற்றும் 23.39 P/E விகிதத்தில் வர்த்தகம் செய்கிறது. இந்த யுடிலிட்டு நிறுவனம் தனது நிகர வருவாயை 39.2% (கடந்த 5 ஆண்டு சராசரி) என்ற விகிதத்தில் 2023 நிதியாண்டில் INR 1,528.38 கோடி என்ற சாதனை அளவிலான லாபத்துக்கு உயர்த்தி வருகிறது.
கடந்த 12 மாதங்களில் இந்திய பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியில் பலன் பெறாமல் 8.4% சரிவை எதிர்கொண்டது. ஜூன் 30, 2023 இல் முடிவடைந்த ஆண்டில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு முதலீட்டை 5.18% முதல் 4.47% வரை குறைத்திருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் குஜராத் கேஸ் லிமிடெட் நிர்வாகம் ஒரு பங்குக்கு ரூ 6.65 ஈவுத்தொகையை அறிவித்துள்ளது, இதற்கு முன் அளிக்கப்பட்ட ஈவுத்தொகை தேதி 11 செப்டம்பர் 2023.
2. MSTC Ltd: மின்-ஏலம், இ-விற்பனை போன்றவற்றின் மூலம் இ-காமர்ஸ் தொடர்பான சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது MSTC நிறுவவனம். இந்த நிறுவனம் சுமார் ரூ.2,874 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.
TTM P/E விகிதம் 12.06 என்ற குறைந்த மட்டத்தில் இருந்தாலும், பங்கு கடந்த 12 மாதங்களில் 40.5% லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. அதன் நிகர வருமானத்தை 25.56% என்ற 5 ஆண்டு சிஏஜிஆரில் அதிகரித்து வருகிறது.
30 ஜூன் 2023 இல் முடிவடைந்த ஒரு வருடத்தில் எஃப்ஐஐக்கள் இந்த கவுண்டரில் 0.31% முதல் 1.09% வரை பலமடங்கு பங்குகளை அதிகரித்துள்ளனர். MSTC நிறுவனம் இப்போது ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு 3.2 ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது. அதன் முந்தைய தேதி 12 செப்டம்பர் 2023.
3. இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப் லிமிடெட்:இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப் இந்த நிறுவனம் இந்திய ரயில்வேயின் நிதிப் பிரிவாக செயல்படுகிறது, சுமார் 95,596 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டு இந்நிறுவனம் பெரும்பாலான ரயில்வே பங்குகளைப் போலவே இந்த பங்கும் ஒரே ஆண்டில் 237.4% மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கியுள்ளது.
இந்திய ரயில்வே துறைக்கு மத்திய மாநில அரசுகள் அதிகப்படியான ஆதரவு அளிக்கும் காரணமாக IRFC பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் இருந்தபோதிலும், பங்கு இன்னும் 15.34 என்ற கண்ணியமான TTM P/E விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
2015 நிதியாண்டில் 6,940.17 கோடி ரூபாய் மொத்த வருவாயை ஈட்டிய இந்நிறுவனம், தற்போது நிதியாண்டில் 6,337.01 கோடி ரூபாய் நிகர வருமானம் ஈட்டியுள்ளது. இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப் லிமிடெட் ஒரு பங்குக்கு ரூ.0.7 ஈவுத்தொகையை அறிவித்துள்ளது, இதன் முன்னாள் டிவிடெண்ட் தேதி 15 செப்டம்பர் 2023 ஆகும்.


Click it and Unblock the Notifications