நேற்று ஒரே அடியா படுத்த பங்குச் சந்தை.. இன்று ஒரே அடியா டாப்..! முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

உலகளாவிய வரிப் போர் மற்றும் அமெரிக்கா பங்கு சந்தையில் நிலவும் மந்தநிலை அச்சங்கள் காரணமாக நேற்று பங்குச் சந்தைகள் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டது. அதாவது, இந்திய பங்கு சந்தை நேற்று காலை ஆரம்ப வர்த்தகத்திலேயே சுமார் 4 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. BSE சென்செக்ஸ் சுமார் 3,000 புள்ளிகள் குறைந்து வர்த்தம் தொடங்கியது, மேலும் NSE நிஃப்டி 22,000 புள்ளிகளுக்குக் கீழே சென்றது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.16 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சிறப்பான ஏற்றத்தை அளித்துள்ளன. அதன்படி, சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. நிஃப்டி 310 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் சுமார் 21 லட்சம் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள் இன்று விட்டதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒரே அடியா படுத்த பங்குச் சந்தை.. இன்று ஒரே அடியா டாப்..! முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: இந்தநிலை இப்படியே நீடித்தால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், இது மியூச்சுவல் ஃபண்ட்டில் தொடர்ச்சிடாப முதலீட்டு திட்டம்( SIP) துவங்குவதற்கான "சரியான நேரம்" எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் வரிகளால் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் எவ்வாறு மாறி வரும் என்பது பற்றி யாருக்கும் எந்தத் தெளிவும் இல்லை. இத்தகைய குழப்பமான நிலையில், காத்திருந்து கவனிப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும், என ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு ஆலோசகர் வி. கே. விஜயகுமார் கூறியுள்ளார்.

இதேபோல், மாஸ்டர் கேபிடல் சர்வீசஸின் உதவி துணைத் தலைவர் விஷ்ணு காந்த் உபாத்யாய் கூறியதாவது, மேலும் மோசமாகும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் நிலையில், சந்தை ஏற்ற இறக்கம் குறுகிய காலத்தில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இருப்பினும், நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் தற்போதைய நிலைகளில் சாத்தியமானதாகவே உள்ளன என்றும் தெரிவித்தார்.

மந்தநிலை குறித்த அச்சங்கள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பீதி அடையாமல் இருக்குமாறும் VSRK கேபிடல் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்வப்னில் அகர்வால் தெரிவித்தார். தற்போதைய சந்தை சூழ்நிலையில் சமநிலையான அணுகுமுறையை கையாளுவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனதில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்: ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் விஜயகுமார் கூறியதாவது, "முதலீட்டாளர்கள் சில முக்கியமான விஷயங்களை மனத்தில் வைத்திருக்க வேண்டும். முதலில், டிரம்ப் விதித்துள்ள இந்த திட்டமில்லாத சுங்க வரிகள் நீண்ட நேரம் தொடர வாய்ப்பில்லை." இரண்டாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் தொகை சுமார் 2 சதவீதம் மட்டுமே என்பதால், இந்தியா ஒப்பீட்டளவில் சிறந்த நிலையை பெற்றுள்ளது, ஆகையால், இந்த வரி போர்களால் இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் பெரியதாக இருக்காது. 3வது, மூன்றாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இருதரப்புத் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்த வரிகள் விதிக்கப்படக்கூடும்.

கவனம் செலுத்த வேண்டிய துறைகள்: எந்தத் துறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விஜயகுமார் கூறியதாவது, உள்நாட்டு நுகர்வை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்கள், விமானப்படை, ஹோட்டல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சீமெண்டு, பாதுகாப்பு துறை மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபாரம் நிறுவனங்கள் ஆகியவையாகும். இவை, தற்போதைய நெருக்கடியிலிருந்து ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாமல் வெளிவர வாய்ப்புள்ளது. மேலும், டிரம்ப் தற்போது பின்வாங்கிய நிலையில் இருப்பதால், மருந்து உற்பத்தித் துறையில் வரிகளை விதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, இந்தத் துறை தாறுமாறான சந்தை சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும் திறன் கொண்டதாக இருக்கக்கூடும்.

இதேபோல், நிதி, எண்ணெய் மற்றும் வாயு, நுகர்வுத்துறை மற்றும் FMCG (வேகமாக நகரும் நுகர்வுப் பொருட்கள்) போன்ற துறைகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஒப்பீட்டளவில் நிலைத்தன்மையை வழங்க வாய்ப்புள்ளது என்று மாஸ்டர் கேபிட்டல் சர்வீசஸின் விஷ்ணு காந்த் உபாத்யாய் கூறினார். மேலும், FMCG, மருந்து மற்றும் நிதி போன்ற துறைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இவை தற்போது ஒப்பீட்டளவில் வலிமையும் நிலைத்தன்மையும் காட்டுகின்றன என்றும் VSRK கேபிடல் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்வப்னில் அகர்வால் கூறினார்.

மியூச்சுவல் ஃபண்ட் SIP க்கு சிறந்த சந்தை சூழ்நிலை: நீண்ட கால பல்வகைப்படுத்தலுக்கு, நிஃப்டி ஜூனியர் (நிஃப்டி நெக்ஸ்ட் 50) மற்றும் நிஃப்டி ETF-கள் நல்ல விருப்பங்கள், இருப்பினும் அவை குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக் காணலாம். இருப்பினும், நீண்டகால வர்த்தகத்தில் இவை நம்பகமான வாய்ப்புகளை வழங்கக்கூடியவை," என கூறப்படுகிறது. "தற்போதைய சந்தை சூழ்நிலை, மியூச்சுவல் ஃபண்ட்களில் SIP மூலம் முதலீட்டைத் தொடங்க மிகவும் ஏற்றது. இது ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்கவும் காலப்போக்கில் சீராக செல்வத்தை உருவாக்கவும் உதவும்," என்று ஸ்வப்னில் கூறினார். மேலும், "இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி பயணம் தொடரும்": இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி பயணம் உறுதியாகவே தொடரும்." என்று Mirae Asset Capital Markets-ன் இயக்குநர் மனீஷ் ஜெயின் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நிதியாண்டு 25-ல் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2024-25 முதல் 2030-31 வரை குறைந்தது 5.1 சதவீத புள்ளிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, "ஒரு கட்டத்தில், இந்தியா வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு தலமாக மாறக்கூடும் என்றும் மனீஷ் ஜெயின் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+