இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் நேர்மறையாகவே வியாழக்கிழமை வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை 9:54 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 95.30 புள்ளிகள் என 0.29% உயர்ந்து 33,225.30 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 30.30 புள்ளிகள் என 0.30 சதவீதம் உயர்ந்து 10,185.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே இன்று(03/22/2018) என்ன பங்குகளை வாங்கலாம், விற்கலாம், ஹோல்டு செய்யலாம் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
இண்டஸ்இண்டு வங்கி
1994-ம் ஆண்டு முபையில் துவங்கப்பட்ட இண்டஸ்இண்டு வங்கி பங்குகளை 1,731 ரூபாய்க்கு வாங்கினால் 2,050 ரூபாய் வரை உயரும் என்று டாய்ச் வங்கி பரிந்துரைத்துள்ளது.
சன் பார்மா
பார்மா பொருட்களை உற்பத்தி செய்து மார்க்கெடிங் செய்துவரும் சன் பார்மா இந்தியாவின் டாப் பார்மா நிறுவனமாகும். இந்தப் பங்குகளை 504 ரூபாய்க்கு வாங்கினால் 587 ரூபாய் வரை உயரும் என்று ஐடிஎப்சி செக்யூரிட்டிஸ் நிறுவனம் பரிந்துரைத்துள்ள
கோடாக் மகேந்திரா வங்கி
கமர்ஷியல் வங்கி சேவை அளித்து வரும் கோடாக் மகேந்திரா நிறுவனப் பங்குகளை 1,045 ரூபாய்க்கு வங்கினால் 1,200 ரூபாய் வரை உயரும் என்றும் ஜேபி மார்கன் பரிந்துரைத்துள்ளது.
சியெட்
வாகனங்களின் டயர், அட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் சியெட் நிறுவனப் பங்குகளை 1,517 ரூபாய்க்கு விற்கலாம் என்று ஐசிஐசிஐ டைரக்ட் பரிந்துரைத்துள்ளது.
ஸ்ட்ரைட்ஸ் ஷசுன்
பார்மா நிறுவனமான ஸ்ட்ரைட்ஸ் ஷசுன் பங்குகளை 692 ரூபாய் கொடுத்து வாங்கினால் 920 ரூபாய் வரை உயரும் என்று எச்டிஎப்சி செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.
பொருத்துத் துறப்பு
இங்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வல்லுநர்கள் கருத்தாகும். இதில் முதலீடு செய்வது சந்தை மற்றும் முதலீட்டாளரின் ரிஸ்க்கிற்கு உட்பட்டது. எந்த வகையிலும் இந்த இணையதளமும், ஆசிரியரும், நிர்வாகமும் இதனால் ஏற்படும் நட்டத்திற்கோ லாபத்திற்கும் பொறுப்பேற்காது.