சென்ற வாரம் சந்தையின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை டிரம்ப் ஸ்டீல், அலுமினியம் பொருட்கள் மீது எடுத்துள்ள வர்த்தகப் போரினால் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 409.73 புள்ளிகள் என 1.24 சதவீதம் சரிந்து 32,596.54 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 116.70 புள்ளிகள் என 1.15 சதவீதம் வரை சரிந்து 9,998.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே வரும் வாரங்களில் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்றும் வல்லுநர்கள் பரித்துறைத்துள்ளவையினை இங்குப் பார்க்கலாம்.
எச்சிஎஸ் டெக்னாலஜிஸ்
இந்தியாவின் 4ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான பங்குகளை 956 ரூபாய் கொடுத்து வாங்கினால் 1020 ரூபாய் வரை உயரும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
டிஎல்எப்
கட்டுமான நிறுவனமான டிஎல்எப் நிறுவன பங்குகளின் விலை 203 ரூபாய் என்று உள்ள நிலையில் விற்கலாம் என்றும் டார்கெட் 190 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 210.4 ரூபாய் என்றும் தெரிவித்தனர்.
வங்கி பங்குகள்
ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி என இரண்டு நிறுவனப் பங்குகளை விற்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
வேதாந்தா மற்றும் டிஎச்எப்எல்
ஸ்டீல் பங்குகள் பெறும் அளவில் வரும் வாரங்களில் சரிய உள்ளதால் வேதாந்தா பங்குகள் தற்போது 276 ரூபாய் என்று உள்ள நிலையில் விற்பனை செய்யலாம் என்றும், நிதி சேவைகள் துறையும் அழுத்தத்தில் உள்ளதால் 495.15 ரூபாய் என உள்ள டிஎச்எப்எல் பங்குகளை விற்பனை செய்யலாம் என்று பங்கு சந்தை வல்லுநரான அஷ்வானி பரிந்துரைத்துள்ளார்.