தொடர் உச்சத்தில் சுஸ்லான் எனர்ஜி.. ஒரு வருடத்தில் பங்குகள் 241% உயர்வு..!

சுஸ்லான் எனர்ஜி பங்குகள் இன்றும் பங்குச் சந்தையில் தொடர் ஏற்றத்தை அடைந்தது. பங்குகள் இன்றும் 5 சதவீத மேல் சுற்றை எட்டின. தரகு நிறுவனமான,மோர்கன் ஸ்டான்லியின் 'அதிக எடை' மதிப்பீட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது அத்துடன் நிறுவனம் என்டிபிசி கிரீன் எனர்ஜியின் முக்கிய காற்று ஆற்றல் ஆர்டர் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த 12 மாதங்களில், சுஸ்லான் எனர்ஜி பங்கு 241 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களின் மூலதனத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

அதே நேரத்தில் நிஃப்டி 28 சதவிகிதம் உயர்ந்தது. செப்டம்பர் 11 அன்று சுஸ்லான் எனர்ஜியின் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட்டைத் தொட்டது. என்டிபிசி துணை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி நிறுவனத்திலிருந்து இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை எரிசக்தி ஆர்டரை நிறுவனம் வென்றதைத் தொடர்ந்து, மோர்கன் ஸ்டான்லி அதன் 'அதிக எடை' மதிப்பீட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிறகு, பங்கு இந்த ஏற்றத்தினை அடைந்துள்ளது.

2023-24 நிதியாண்டில் நிறுவனம் நிதி திரட்டி கிட்டத்தட்ட ரூ. 1,500 கோடி கடனைத் தீர்த்த பிறகு, ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக நிகர மதிப்பை நேர்மறையாக்கியதுடன் பங்கு குறிப்பிடத்தக்க வாங்குதல் ஆர்வத்தை ஈர்த்தது. அத்துடன் பிளாக்ராக் போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் பங்குதாரர்களாக இணைந்தனர். ஏப்ரல் 2023 மற்றும் செப்டம்பர் 2024 க்கு இடையில் சுஸ்லான் எனர்ஜி பங்கு 9 மடங்கு உயர்ந்துள்ளது. வெறும் 18 மாதங்களில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சென்றுள்ளது. இந்த காலகட்டத்தில், சுஸ்லானின் ஆர்டர் புக் 8 மடங்கு உயர்ந்துள்ளது. இதில் என்டிபிசி கிரீன் எனர்ஜியின் சமீபத்திய ஆர்டர் அடங்கும்.

 தொடர் உச்சத்தில் சுஸ்லான் எனர்ஜி.. ஒரு வருடத்தில் பங்குகள்  241% உயர்வு..!

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சமீபத்தில் சுஸ்லான் எனர்ஜிக்கான டார்கெட் விலையை ரூ. 70ல் இருந்து ரூ. 80க்கு உயர்த்தியுள்ளது. அதே சமயம் பங்குகளின் மதிப்பின் சமீபத்திய எழுச்சி காரணமாக வாங்குதல் மதிப்பீட்டை கொடுத்துள்ளது. நிறுவனம் சுஸ்லானை அதன் 2026ம் நிதியாண்டிற்கான வருவாயை 50 மடங்கு அதிகமாக மதிப்பிடுகிறது. கடந்த ஏப்ரல் 2022 இல் குறிப்பிட்டுள்ளபடி, அதன் முக்கிய சொத்துக்களை விற்கும் உத்திக்கு இணங்க, செயல்படுத்தும் திறனை அதிகரிக்கவும் கூடுதல் ஆர்டர்களைப் பெறவும் திரட்டப்பட்ட மூலதனத்தைப் பயன்படுத்த சுஸ்லான் திட்டமிட்டுள்ளது என்பதை ஐசிஐசிஐ சுட்டிகாட்டுகிறது.

காலை 9:33 மணியளவில், தேசிய பங்குச் சந்தையில் சுஸ்லான் எனர்ஜி பங்குகள் ரூ.81.95க்கு வர்த்தகம் செய்ய 5 சதவீத அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்டது. நிஃப்டியின் வருவாயான 14 சதவீதத்தை விட இந்த ஆண்டு இதுவரை பங்கு 112 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதங்களில், சுஸ்லான் எனர்ஜி பங்கு 241 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களின் மூலதனத்தை மூன்று மடங்காக உயர்த்தியது. அதே நேரத்தில் நிஃப்டி 28 சதவிகிதம் உயர்ந்தது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+