ஸ்விக்கி ஊழியர்கள் கோடீஸ்வரர்களானது எப்படி..? ESOP எப்படி வேலை செய்கிறது..?

இந்தியாவின் புகழ்பெற்ற உணவு டெலிவரி மற்றும் குயிக் காமர்ஸ் சேவை நிறுவனமாக ஸ்விக்கி செயல்பட்டு வருகிறது. ஸ்விக்கி வாயிலாக உணவு பொருட்களும், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழியாக மளிகை சாமான்களும் டெலிவரி செய்யப்படுகின்றன.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் பொருட்டு ஸ்விக்கி நிறுவனம் கடந்த வாரம் ஐபிஓ வெளியீடு செய்தது. நவம்பர் 13ஆம் தேதி ஸ்விக்கி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.ஸ்விக்கி ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 390 ரூபாய் என வழங்கப்பட்டது. புதன்கிழமை சந்தையில் பட்டியலிடப்படும் போது தேசிய பங்குச்சந்தையில் 7.7% பிரீமியத்தில் 420 ரூபாய் என வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் 5.2% உயர்வாக 412 ரூபாய் என வர்த்தகமானது.

ஸ்விக்கி ஊழியர்கள் கோடீஸ்வரர்களானது எப்படி..? ESOP எப்படி வேலை செய்கிறது..?

ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டின் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் சுமார் 500 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். Employee Stock Ownership Plan எனப்படும் ஊழியர்களுக்கான பங்கு உரிமை திட்டம் மூலம் இது சாத்தியமாக உள்ளது. Employee Stock Option Plan (Esop) என்பது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவன பங்குகளை வழங்கி அவர்களையும் உரிமையாளர்கள் ஆக்குவதாகும்.

தற்போது இருக்கும் கரண்ட் மார்கெட் வேல்யூவை விட குறைந்த விலையில் பங்குகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும். Employee Stock Option Plan திட்டத்தின் பிரதான நோக்கமே ஊழியர்களை நீண்ட காலம் நிறுவனத்தில் தக்க வைப்பது மற்றும் நிறுவனத்திற்கு விஸ்வாசமாக இயங்க வைப்பது ஆகும்.

ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் தங்கள் ஊழியர்கள் நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்கள், அவர்களின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு இதுபோன்ற பங்குகளை ஒதுக்கீடு செய்யும்.

முன்னதாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட ஐபிஓ தொடர்பான ஆவணத்தில் செப்டம்பர் 2024 நிலவரப்படி தங்கள் நிறுவனத்தின் Employee Stock Option திட்டத்தின் கீழ் 231 மில்லியன் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்த பங்குகளின் மதிப்பு 9046.65 கோடி ரூபாய் மதிப்பீடு கொண்டது என தெரிவித்திருந்தது.

எனவே இதன் மூலம் ஸ்விக்கியில் பணியாற்றும் சுமார் 500 ஊழியர்கள் கோடீஸ்வரராக உள்ளனர். தற்போது அவர்களுக்கு சொந்தமான பங்குகளின் மதிப்பு பல கோடிகளாக உயர்ந்துள்ளது . Employee Stock Option திட்டத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் இவர்களின் 500க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர் ஆகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓக்களில் ஸ்விக்கி நிறுவன ஐபிஓவும் ஒன்று. இந்திய பங்குச்சந்தையில் ஸோமேட்டோ நிறுவனம் பட்டியலிடப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் தற்போது பங்குச்சந்தையிலிடப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+