சென்னை: தனியார் துறையை சேர்ந்த வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அடுத்த வாரத்தில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
இந்த பொதுப் பங்கு வெளியீடானது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதன் வெளியீட்டு தேதியானது செப்டம்பர் 5 அன்று தொடங்கவுள்ளது. இந்த வெளியிட்டிற்கான கடைசி தேதி செப்டம்பர் 7 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை எப்படி?
இந்த பொது பங்கு வெளியீட்டின் மதிப்பானது 800 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இந்த பங்கு வெளியீட்டின் விலையானது 500 - 525 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் லாட் சைஸ் 28 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக நீங்கள் அதிக பங்குகளை வாங்க வேண்டுமெனில் அதன் மடங்கில் வாங்க வேண்டும்.
பழமையான வங்கி
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் பழமையான தனியார் வங்கியாகும். கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கி வரும் ஒரு வங்கியாகும். குறிப்பாக சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு தனது வங்கி சேவையினை வழங்கி வருகின்றது.
சில்லறை வாடிக்கையாளர்களுக்கு?
இந்த வெளியீட்டில் 10% சில்லறை வாடிக்கையாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் காசா விகிதம் (Current account and savings account deposits) 30.50% ஆக உள்ளது. இவ்வங்கியின் கடந்த நிதியாண்டிற்கான CAGR விகிதம் 41.99% அதிகரித்துள்ளது. இதன் நிகரலாபம் கடந்த நிதியாண்டில் 820 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
எவ்வளவு அதிகபட்ச முதலீடு?
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இந்த வெளியீட்டின் மூலம் 831.60 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக 13 லாட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. ஆக முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 14,700 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 1,91,100 ருபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
எப்போது பட்டியல்?
செப்டம்பர் 12 அன்று யாருக்கு எவ்வளவு பங்கு ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்குகள் என் எஸ் இ மற்றும் பி எஸ் இ-யில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கினை செப்டம்பர் 15 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பு என்ன?
மார்ச் 31, 2022 நிலவரப்படி, இவ்வங்கி 509 கிளைகளை கொண்டுள்ளது. இதில் 106 கிளைகள் கிராமப்புற பகுதிகளிலும், 80 சிறு நகரங்களிலும், 76 மெட்ரோ நகரங்களிலும் உள்ளது. இது தமிழகத்தில் தான் அதிக கிளைகளை கொண்டுள்ளது. தமிழகத்தில் 369 கிளைகளை கொண்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications