Dmart-ஐ தூக்கி சாப்பிட்ட டாடா.. நோயல் டாடாவிற்கு கிடைத்த முதல் வெற்றி..!!

செப்டம்பர் காலாண்டில் பலவீனமான முடிவுகளைத் தொடர்ந்து டி-மார்ட் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் பங்குகள் நேற்று கடுமையாக வீழ்ச்சியடைந்தன. ஆனால் இன்று ஓரளவு மீண்டுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. இதற்கிடையில், டாடாவுக்குச் சொந்தமான ட்ரெண்ட் அதன் சந்தை மதிப்பில் ராதாகிஷன் தமானியின் நிறுவனத்தை முந்தியுள்ளது. ட்ரெண்டின் சந்தை மதிப்பு ரூ.2.93 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் சந்தை மதிப்பு ரூ.2.73 லட்சம் கோடியாக உள்ளது.

தற்போது டாடா குழுமத்திற்கு சொந்தமான ட்ரெண்ட்டின் மதிப்பு ரூ.2.93 லட்சம் கோடி ஆக உள்ளது. சந்தை மதிப்பின் அடிப்படையில் ராதாகிஷன் தமானிக்கு சொந்தமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸை விட அதிகரித்துள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.2.73 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

 Dmart-ஐ தூக்கி சாப்பிட்ட டாடா.. நோயல் டாடாவிற்கு கிடைத்த முதல் வெற்றி..!!

இதற்கு காரணம், பலவீனமான இரண்டாம் காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து பல தரகர்கள் அவென்யூ சூப்பர்மார்ட்ஸைக் குறைத்து இலக்கு விலையை ரூ.3,702 ஆகக் குறைத்துள்ளனர். இதன் விளைவாக, நேற்றைய பங்குச் சந்தையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் பங்குகள் 10% உயர்ந்தன. 9.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்ட நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் லாபம் 8 சதவீத உயர்வு இருந்தது. ஆனால் முந்தைய (ஏப்ரல் - ஜூன்) காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது 12 சதவீதம் சரிந்து ரூ.812.45 கோடியாக உள்ளது. விரைவான வர்த்தக சேவை டி மார்ட்டை பெரிய அளவில் தாக்கியுள்ளது.

மறுபுறம், ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா, ட்ரெண்டில் முன்னணியில் உள்ளார். முன்னாள் டாடா ட்ரஸ்ட் தலைவர் ரத்தன் டாடா மறைவை தொடர்ந்து இவர் டாடா டிரஸ்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பிறகு, ட்ரெண்ட் பங்குகள் அதிகரித்தன. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த வாரம் ட்ரெண்ட் லேப்பில் உருவாக்கப்பட்ட வைரங்களை விற்பனை செய்வதற்காக 'போம்' என்ற பிராண்டை அறிமுகப்படுத்தியது. அதை வெஸ்ட்சைட் கடைகளில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு விலை 2% அதிகரித்துள்ளது. அத்துடன் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இன்று பங்கு எப்படி வர்த்தகமானது?: அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் பங்குகள் அக்டோபர் 15 இன்று பங்குகள் சற்று உயர்ந்தன. வர்த்தகம் முடிவு நேரத்தில் பங்குகளின் விலை 0.42 சதவீதம் அதிகரித்து தொடர்ந்து ரூ.4,201க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

அதே சமயம் ட்ரெண்ட் பங்குகள் இன்று சிறிய சரிவை சந்தித்தது. அதன்படி இன்றைய வர்த்தக நேர முடிவில் 0.82% சரிவில் ரூ.8,125-ல் வர்த்தகம் முடிந்தது. இந்த மாற்றத்திற்குப் பிறகும், டி-மார்ட்டை விட டிரெண்டின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+