இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்துக்கு சொந்தமான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், தங்கள் பங்குகளை 1:10 விகிதத்தில் பிரிப்பதற்கான "ரெக்கார்ட் தேதியை" அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், நிறுவனத்தின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பிரிப்பதற்கான ரெக்கார்ட் தேதியாக அக்டோபர் 14ஆம் தேதியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, டாடா குழுமத்தின் இந்தப் பங்கு கணிசமான ஏற்றம் கண்டது. இன்ட்ராடே வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்ததால், பங்குப் பிரிப்பு மீதான எதிர்பார்ப்பு வலுப்பெற்றது.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ. 40,555.42 கோடியாக உள்ளது. இந்தப் பங்கு ரூ. 7,448.95-ல் வர்த்தகத்தைத் தொடங்கி, ரூ. 8,131 வரை உயர்ந்தது. முந்தைய நாளின் இறுதி விலை ரூ. 7,279.45 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 11.69% இதன் மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனம் செப்டம்பர் 22, 2025 அன்று அஞ்சல் வாக்குப்பதிவு மூலம் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ரூ. 10 முகமதிப்புள்ள பங்கு, ரூ. 1 முகமதிப்புள்ள 10 பங்குகளாகப் பிரிக்கப்படும். இதற்கான தகுதியான பங்குதாரர்களைத் தீர்மானிக்க, அக்டோபர் 14, 2025 செவ்வாய்க்கிழமை "ரெக்கார்ட் தேதி" ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நிதிநிலை குறித்துப் பார்க்கும்போது, காலாண்டு அடிப்படையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விற்பனை ரூ. 16 கோடியில் இருந்து ரூ. 145 கோடியாக 806.25% அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ. 7 கோடியில் இருந்து ரூ. 134 கோடியாக உயர்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் (PBT) ரூ. 36 கோடியில் இருந்து ரூ. 168 கோடியாக, அதாவது 366.67% உயர்ந்துள்ளது.
இதேபோல், நிகர லாபம் ரூ. 38 கோடியில் இருந்து ரூ. 146 கோடியாக 284.21% அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY), டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் வளர்ச்சி மிதமானதாக இருக்கிறது. விற்பனை ரூ. 142 கோடியில் இருந்து ரூ. 145 கோடியாக 2.11% அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ. 131 கோடியில் இருந்து ரூ. 134 கோடியாக 2.29% உயர்ந்துள்ளது.
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் என்பது வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இது பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், பத்திரங்களின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, நிலையான வருமானத்தைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications