1 பங்கை 10ஆக பிரிக்கிறது டாடா குழும நிறுவனம்; ரெக்கார்ட் தேதியும் அறிவிப்பு!!

இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்துக்கு சொந்தமான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், தங்கள் பங்குகளை 1:10 விகிதத்தில் பிரிப்பதற்கான "ரெக்கார்ட் தேதியை" அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், நிறுவனத்தின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பிரிப்பதற்கான ரெக்கார்ட் தேதியாக அக்டோபர் 14ஆம் தேதியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, டாடா குழுமத்தின் இந்தப் பங்கு கணிசமான ஏற்றம் கண்டது. இன்ட்ராடே வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்ததால், பங்குப் பிரிப்பு மீதான எதிர்பார்ப்பு வலுப்பெற்றது.

1 பங்கை 10ஆக பிரிக்கிறது டாடா குழும நிறுவனம்; ரெக்கார்ட் தேதியும் அறிவிப்பு!!

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ. 40,555.42 கோடியாக உள்ளது. இந்தப் பங்கு ரூ. 7,448.95-ல் வர்த்தகத்தைத் தொடங்கி, ரூ. 8,131 வரை உயர்ந்தது. முந்தைய நாளின் இறுதி விலை ரூ. 7,279.45 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 11.69% இதன் மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் செப்டம்பர் 22, 2025 அன்று அஞ்சல் வாக்குப்பதிவு மூலம் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ரூ. 10 முகமதிப்புள்ள பங்கு, ரூ. 1 முகமதிப்புள்ள 10 பங்குகளாகப் பிரிக்கப்படும். இதற்கான தகுதியான பங்குதாரர்களைத் தீர்மானிக்க, அக்டோபர் 14, 2025 செவ்வாய்க்கிழமை "ரெக்கார்ட் தேதி" ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் நிதிநிலை குறித்துப் பார்க்கும்போது, காலாண்டு அடிப்படையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விற்பனை ரூ. 16 கோடியில் இருந்து ரூ. 145 கோடியாக 806.25% அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ. 7 கோடியில் இருந்து ரூ. 134 கோடியாக உயர்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் (PBT) ரூ. 36 கோடியில் இருந்து ரூ. 168 கோடியாக, அதாவது 366.67% உயர்ந்துள்ளது.

இதேபோல், நிகர லாபம் ரூ. 38 கோடியில் இருந்து ரூ. 146 கோடியாக 284.21% அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY), டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் வளர்ச்சி மிதமானதாக இருக்கிறது. விற்பனை ரூ. 142 கோடியில் இருந்து ரூ. 145 கோடியாக 2.11% அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ. 131 கோடியில் இருந்து ரூ. 134 கோடியாக 2.29% உயர்ந்துள்ளது.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் என்பது வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இது பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், பத்திரங்களின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, நிலையான வருமானத்தைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+