மும்பை: டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து புதன்கிழமை மும்பை பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2% வரை உயர்ந்தது.
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது நிறுவனம் தற்போது எந்த கடனும் இல்லாமல் சுயமாக செயல்படும் நிறுவனமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளது.

தங்களது ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிலும் 2025ஆம் நிதியாண்டில் கடன் இல்லாத ஒரு நிறுவனமாக மாறிவிடும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை எடுத்து மும்பை பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, 1,010.25 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
பயணிகள் வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் வர்த்தகத்தை தனி தனி நிறுவனங்களாக பிரித்தது நல்ல வளர்ச்சியை தரும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே டாடா மோட்டார்ஸ் பங்கு குறித்து பல்வேறு தரகு நிறுவனங்களும் தங்களின் கணிப்பை வெளியிட்டுள்ளன.
சிஎல்எஸ்ஏ தரகு நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு வாகன துறையில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்ட வளர்ச்சியை காணும் என்றும் அதற்கு ஏற்ப திறமையான மேலாண்மையை அந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் வணிக வாகனங்களுக்கான டிமாண்ட் என்பது அடுத்த சில ஆண்டுகளில் 4-5 சிஏஜிஆர் வரை வளரும் எனக் கூறியுள்ளது. எனவே சிஎல்எஸ்ஏ தரகு நிறுவனம் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 'அவுட் பெர்ஃபார்ம்" ரேட்டிங் என்ற பிரிவில் வைத்து ஒரு பங்கின் மதிப்பு 1,181 ரூபாய் வரை உயரக்கூடும் என் தெரிவித்துள்ளது.
ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் வணிக வாகனங்கள் பிரிவு ஒரு இலக்கம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என கருதப்படும் நிலையில் டாடா மோட்டார்ஸ் இரண்டு இலக்கங்களை இலக்காக கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.இதன் பங்கு மதிப்பு 1200 ரூபாய் வரை உயரக்கூடும் என கணித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் டாடா மோட்டார்ஸின் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மார்ஜின் என்பது 2025ஆம் நிதி ஆண்டில் சீராக இருக்கும் என்று கூறி இந்த நிறுவனத்தின் பங்குக்கு நியூட்ரல் என்ற மதிப்பீட்டைத் தந்துள்ளது. பங்கின் மதிப்பு 955 ரூபாயாக உயரலாம் என தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் மதிப்பு குறையலாம் என கூறியுள்ளது. அதாவது 915 ரூபாய் வரை சரியலாம் என தெரிவித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications