டாடா ஸ்டீல் நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் தனது கிளை நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வாங்கி உள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தை பொருத்தவரை பல்வேறு நாடுகளிலும் துணை நிறுவனங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் டாடா-வால் தொடங்கப்பட்ட துணை நிறுவனம் தான் T Steel Holdings Pte நிறுவனம்.
தற்போது டாடா ஸ்டீல் இதில் கணிசமான பங்குகளை வாங்கி முழுக்க முழுக்க தங்களின் கட்டுக்குள் இருக்கும் நிறுவனமாக மாற்றியுள்ளது. ஃபேஸ் வேல்யூ 0.157 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 557 கோடி பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 7,324.41 கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய டி ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கீழ் செயல்படக்கூடிய ஒரு முழுமையான துணை நிறுவனமாக மாறி இருக்கிறது. டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்த ஆவணத்தில் இதனை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டாடா ஸ்டீல் நிறுவனம் தங்களுடைய வெளிநாட்டு துணை நிறுவனங்களில் கணிசமான ஈக்விட்டி பங்குகளை வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. நடப்பு நிதி ஆண்டிலேயே இது நடைபெறும் எனக் கூறியிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தற்போது டி ஸ்டீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ளது. அண்மையில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் கச்சா ஸ்டீல் உற்பத்தி ஓராண்டு கால இடைவெளியில் 5 சதவீதம் என்ற அளவு உயர்ந்து 5.25 மில்லியன் டன்களாக அதிகரித்தது. டாடா ஸ்டீல் நிறுவனத்தை பொறுத்தவரை சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் டி ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறது.
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் 555 கோடி ஆகும். இதன் வருமானம் 58 ,687 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் என்பது 6,601 கோடி ரூபாயாக இருக்கிறது. டாடா குழுமம் கடந்த 2006ஆம் ஆண்டு டி ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை சிங்கப்பூரில் நிறுவியது. டாடா ஸ்டீல் விரைவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications