டிசிஎஸ் பங்கு விலை இனி எப்படியிருக்கும்.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

TCS: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், வியாழக்கிழமையன்று காலை தொடக்கத்திலேயே சற்றே சரிவில் காணப்படுகின்றது.

இது டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து, இன்று பங்குகள் சரிவில் காணப்படுகின்றது.இது நிபுணர்களின் மதிப்பீட்டினை காட்டிலும் லாபமானது குறைந்துள்ள நிலையில், பங்கு விலையும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

டிசிஎஸ் பங்கு விலை இனி எப்படியிருக்கும்.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

தற்போது 12.41 மணி நிலவரப்படி, என் எஸ் இ-யில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் 1.60% குறைந்து, 3189.75 ரூபாயாக இருந்தது. இதன் உச்ச விலை 3230 ரூபாயாக உள்ளது. இன்றைய குறைந்தபட்ச விலை 3180 ரூபாயாகும்.

பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.59% குறைந்து, 3190.60 ரூபாயாகவும் உள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 3226 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 3181.05 ரூபாயாகும்.

டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலாண்டில் 14.8% அதிகரித்து, 11,392 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிபுணர்கள் 11,530 கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என கணித்துள்ளனர்.

இதே ஜனவரி - மார்ச் காலாண்டில் ஆர்டர் புத்தகத்தில் 10 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 11.5% குறைந்துள்ளது. எனினும் மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் என்பது புதிய உச்சத்தினை இதுவரையில் அளவுக்கு எட்டியுள்ளது. இது முன்னதாக 7 பில்லியன் டாலர் - 9 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு இருந்தது.

டிசிஎஸ் பங்கு விலை இனி எப்படியிருக்கும்.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதமானது 17% அதிகரித்துள்ளது. டிசிஎஸ் முதல் நிறுவனமாக கடந்த காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஐடி துறையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, அதன் தாக்கம் என்பது சற்றே காணப்படுகின்றது. இது அடுத்து வரும் காலாண்டுகளிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுவாமா: சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தேவையானது சரியலாம் என்ற கவலையானது இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் சர்வதேச அளவிலான ஒப்பந்தங்கள் என்பது மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த போக்கானது வரவிருக்கும் காலாண்டுகளிலும் தொடர்ந்தால் ஐடி துறையானது தொடர் வளர்ச்சி காணலாம்.

டிசிஎஸ் பங்கு விலை இனி எப்படியிருக்கும்.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

இந்த தேவையில் டிசிஎஸ் மிகப்பெரிய ஒரு பயனாளியாக இருக்கலாம். இது மீடியம் டெர்மிலும் மற்றும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இலக்கு விலையாக 3750 ரூபாயாக கணித்துள்ளது. இது முந்தைய இலக்கு விலை 4100 ரூபாயாகவும் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+