கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 1,91,434.41 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் இன்ஃபோசிஸ், அடுத்த இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும் உள்ளது.
எனினும் இந்த வாரத்தில் ஐசிஐசிஐ வங்கி மட்டும் தனி லூசராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் ஏற்றம்
இது இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் , பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்படலாம் என்ற பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியிலும், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் ஆளும் கட்சியே பெரும்பான்மை இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. இது சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்தது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1216.49 புள்ளிகள் அதிகரித்து அல்லது 2.23% அதிகரித்தும் காணப்பட்டது.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 49,492.7 கோடி ரூபாய் அதிகரித்து, 16,22,543.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,399.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 41,553.59 கோடி ரூபாய் அதிகரித்து, 7,66,447.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1822 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
இதே போல டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 27,927.84 கோடி ரூபாய் அதிகரித்து, 13,31,917.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.60% குறைந்து, 3599.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 22,956.67 கோடி ரூபாய் அதிகரித்து,3,81,586.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 694.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 17,610.19 கோடி ரூபாய் அதிகரித்து, 4,92,204.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 2094.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி-வங்கியின் சந்தை மூலதனம் 16,853.02 கோடி ரூபாய் அதிகரித்து, 7,74,463.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 1396.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 7,541.3 கோடி ரூபாய் அதிகரித்து, 4,19,813.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 470.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 5,308.61 கோடி ரூபாய் அதிகரித்து, 4,00,014.04 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 6628 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனம் 2210.49 கோடி ரூபாய் அதிகரித்து, 4,04,421.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்து,2230 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதற்கிடையில் டாப் 10 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு மட்டும், 7023.32 கோடி ரூபாய் குறைந்து, 4,71,047.52 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 677.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications