சென்னை: இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருக்கிறது. எனவே தான் அமேசான் , பிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. பொதுவாகவே செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகள் வரும். எனவே புதிய துணிகள், நகைகள் என மக்களின் வாங்கும் போக்கும் அதிகரிக்கும்.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் குறிப்பிட்ட மூன்று துறைகளை சார்ந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும் என முதலீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட் ஸ்மித் இந்தியா நிறுவனத்தின் தலைவரான மயூரேஸ் ஜோசி எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் இனி ட்ரெண்ட், ஆதித்யா பிர்லா ஃபேஷன் , ரேமன்ட் லைப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவு உயரும் என தெரிவித்துள்ளார். மேலும் தங்கம் மற்றும் நகைகள் சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயரக்கூடும் என கணித்துள்ளார்.
அடுத்தடுத்து நவராத்திரி திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருக்கின்றன. எனவே அடுத்த சில மாதங்களுக்கு ஆடை, ஆபரணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என மயூரேஸ் ஜோசி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆடை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நகை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் நல்ல லாபத்தை பார்க்கும் எனவும் இதன் காரணமாக அந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலம் மட்டுமின்றி திருமணங்களும் அதிக அளவில் நடைபெறும் என்பதால் முதலீட்டாளர்கள் நிச்சயமாக ட்ரெண்ட், ஆதித்யா பிர்லா ஃபேஷன், ரேமண்ட் லைப் ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்ளின் பங்குகளை வாங்கலாம் என்றும் தங்கம் மற்றும் நகை விற்பனை நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
பொதுவாகவே ஒரு ஆண்டின் இரண்டாவது பாதியில் மக்களின் நுகர்வு அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் இதனை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு உத்திகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தற்போது பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஆடை மற்றும் ஆபரண சில்லறை விற்பனை கடைகளை பெரிய நகரங்கள் மட்டும் இல்லாமல் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி வருகின்றன.
எனவே அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனங்களின் வருமானமும் லாபமும் படிப்படியாக உயரும் . இதனை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்தால் கணிசமான லாபத்தை காண முடியும் என பரிந்துரை செய்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications